இந்திய பொருளாதாரம் குறித்து பேச ராகுலுக்கு தகுதி இல்லை – நிர்மலா சீதாராமன்

‘இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு தகுதி இல்லை’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

‘உற்பத்தித் துறையில் கடந்த 2010ல் 15.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், தற்போது 12.6 சதவீதமாக குறைந்துவிட்டது. சிறந்த நிறுவனங்களெல்லாம் இருந்தும், உற்பத்தி ஒழுங்குமுறையை சீனாவிடம் ஒப்படைத்து விட்டோம்,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:

இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு தகுதி இல்லை. அவர் போதுமான தகுதி பெற்றவர் அல்ல. அவருக்கு முட்டாள்தனமான தன்னம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்த அவர்கள் தவறி விட்டார்கள். உங்கள் ஆட்சியின் போது, ​​நீங்கள் சீனாவுக்குச் சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள். அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் வெளியிடவில்லை?

காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து சீனா எவ்வளவு நிலத்தை எடுத்தது என்பது பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? உங்கள் ஆட்சியின் பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு யூனிட்டையாவது உருவாக்கினீர்களா?

பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அவர்கள் விட்டுச்சென்ற பிரச்னையை சரி செய்ய நாங்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் செலவிட்டோம். பொருளாதாரத்தில் 5ம் இடத்திற்கு முன்னேறினோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மூன்றாவது இடத்தை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...