சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-வின்  முதல் 15 நாட்களிலேயே, மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. “நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் கீழ் ஐதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 12.10.2024 அன்று தொடங்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, எரிசக்திக்காக  வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுரங்க அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், 1.6 டன் அலுமினியக் கழிவுகளைப் பயன்படுத்தி, வியப்பூட்டும்  சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்தக் கலைப்படைப்பு தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 6-ல் உள்ள ராணி லட்சுமிபாய் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தூய்மை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சியாக, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்,  புவி பாரம்பரிய மற்றும் புவி சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காண்பதிலும், சுரங்க அமைச்சகம், பொது மக்களின் 80% கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...