சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-வின்  முதல் 15 நாட்களிலேயே, மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. “நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் கீழ் ஐதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 12.10.2024 அன்று தொடங்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, எரிசக்திக்காக  வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுரங்க அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், 1.6 டன் அலுமினியக் கழிவுகளைப் பயன்படுத்தி, வியப்பூட்டும்  சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்தக் கலைப்படைப்பு தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 6-ல் உள்ள ராணி லட்சுமிபாய் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தூய்மை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சியாக, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்,  புவி பாரம்பரிய மற்றும் புவி சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காண்பதிலும், சுரங்க அமைச்சகம், பொது மக்களின் 80% கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...