மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வீணடிக்கும் சபா – ஜக்தீப் தன்கர் கவலை

பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்,” என ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடியது ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்தி இருந்தாலும், இந்த அவையில் நமது நடவடிக்கை வேறு விஷயங்களை சொல்கிறது.

இந்த அவை 43 மணி நேரம் 27 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான உண்மை கவலை அளிக்கிறது. எம்.பி.,க்கள் ஆகிய நாம் இந்திய மக்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். இந்த தொடர்ச்சியான இடையூறுகள், நமது ஜனநாயக அமைப்புகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன.சில சட்டங்களை நிறைவேற்றியும், இந்தியா சீனா உறவுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை கேட்டது என பல சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும் அது அனைத்தையும் நமது தோல்வி மறைத்துவிட்டது.

நாம் அனைவரும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். நாட்டின் 140 கோடி மக்கள் நம்மிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்க்கின்றனர். அர்த்தமுள்ள விவாதம், இடையூறுக்கு இடையேயான நேரத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். நமது ஜனநாயக மரபானது, அரசியல் வேறுபாடுகளை தாண்டி எழுச்சி பெறுவதையும், பார்லிமென்டின் புனிதம் உறுதி செய்யப்படுவதையும் எதிர்பார்க்கிறது.

இந்த அவை தனித்துவமானது. நமது ஜனநாயகத்தை இந்த உலகம் எதிர்பார்த்து கொண்டு உள்ளது. நமது நடத்தை மூலம் நமது மக்களை தோல்வி அடையச் செய்துவிட்டோம். பார்லிமென்ட்டிற்கு இடையூறு என்பது மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கேலி செய்கின்றன. அனுபவமிக்க விவாதம் மேலோங்க வேண்டிய நிலையில் இடையூறு மட்டுமே காண்கிறோம். மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...