27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டில்லியில் பாஜக ஆட்சி

மத்தியிலும், பல மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தேசிய தலைநகர் டில்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வந்த பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பின், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பெரும் முட்டுக்கட்டையாக இருந்த ஆம் ஆத்மி என்ற தடையை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி உள்ளார்.

கடந்த 1993ல் டில்லிக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், பா.ஜ., வென்றது. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் என்று மூன்று பேர் மாறி மாறி முதல்வர்களாக இருந்தனர்.

அதன்பின், 1998 – 2013 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் வென்று, ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து, 2013ல் நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி வென்றது.

முதல்வராக பதவியேற்ற, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி, 48 நாட்களில் முடிவுக்கு வந்தது. ஆம் ஆத்மிக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெஜ்ரிவாலின் ஆட்சி குறுகிய காலத்தில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதியின் ஆட்சி அமலில் இருந்தது. கடந்த 2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளில் 67ல் வென்றது. 2020 தேர்தலில் ஆம் ஆத்மி, 62ல் வென்றது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஆதிஷி முதல்வரானார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில், கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டது.

தேசிய அளவிலான, ‘இண்டி’ கூட்டணியில், ஆம் ஆத்மியுடன் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், தேசிய தலைநகரில் வெற்றி பெற முடியாதது, அக்கட்சிக்கு பெரிய நெருடலாகவே இருந்தது.

கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், டில்லியின் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றினாலும், சட்டசபையை கைப்பற்ற முடியாதது, கட்சித் தலைமைக்கு கவுரவ பிரச்னையாகவே இருந்தது. சர்வதேச ஊடகங்களும் இதை விமர்சித்து செய்தி வெளியிட்டன.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்த முறை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் என, பெரும் படை களமிறக்கப்பட்டது. இதைத் தவிர, ஹரியானா, மஹாராஷ்டிராவில் உதவியதுபோல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களப்பணியில் இறங்கியது.

மதுபான ஊழல் மோசடி மற்றும் தான் தங்குவதற்கு சொகுசான கண்ணாடி மாளிகை கட்டியது ஆகியவற்றால், கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவானது. இதை சாதகமாக்கி, அவற்றை வைத்து பா.ஜ., பிரசாரம் செய்தது.

மேலும், மத்திய பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவினர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டில்லி வாக்காளர்களில் 60 சதவீதம் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் மத்திய அரசுப் பணிகளில் அதிகம் உள்ளோர். புதிய சம்பள கமிஷன் அறிவிப்பும், இவர்களை ஈர்த்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., முன்னிலையில் இருந்தது.இறுதியில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அதை விட அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று சாதித்துள்ளதுஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மாவிடம், 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் தொண்டர்கள் நாடு முழுதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.,வுக்கு இந்த வரலாற்று வெற்றியை அளித்த அனைவருக்கும் அடிமனதில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டில்லியில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதில் டில்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.- நரேந்திர மோடி,பிரதமர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...