காரம்

 காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை போன்றவற்றில் காரச்சுவை அதிகம் உள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பது பழமொழி.

காரத்தில் மிளகு முதலிடம் வகிக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கவும், சீரணத்திற்கும் துணைபுரிகிறது. காரம் நாவிற்குச் சுவையையும், உடலுக்குச் சூட்டையும், உணர்வையும் தருகிறது.

காரம் உமிழ்நீர் சுரக்க உதவும். உமிழ்நீர் சீரணத்திற்கு உதவுகிறது. உணவை மெல்லும்போது உணவு உமிழ்நீரோடு கலப்பதால் நன்கு சீரணிக்கப்படுகிறது. உமிழ்நீர் வெளியில் எங்கும் விற்பனைக்குக் கிடைப்பதன்று. அதனால் உணவை நன்றாக மென்று பிறகுதான் உண்ண வேண்டும். 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது பழமொழி.

உணவுண்ணும்போது உணவுடன் உமிழ்நீர் கலந்து செல்ல வேண்டும். நாவில் உணவின் சுவை அறிய வேண்டும். அப்போது உடலுக்குத் தேவையற்ற கல், மண், நார், முடி போன்றவை நாவில், பற்களில் அகப்படும். உணவை நன்றாக மென்று உண்பதால் உணவும் சீரான முறையில் சீரணமாகும்.

காரம் அளவுடன் பயன்படுத்தினால் புண்களை ஆற்ற உதவும். அளவுக்கு அதிகமானால் அதற்கேற்றவாறு உடல் சூடு அதிகமாகும். மற்றும் உணர்ச்சிவசப்படுவது அதிகம் ஆகும். கண்கள் சிவந்து அத்துடன் கோபம் அதிகமாகும்.

வயிற்றில் புண் உண்டாகும். மலம் கழிவது மாறுபடும். மலம் கழியும்போதும், சிறுநீர் கழியும்போதும், எரிச்சல் உண்டாகும். வயிற்றில் சீரணிக்கும் தன்மை இயல்பு நிலையிலிருந்து மாறிவிடும்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...