காரம்

 காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை போன்றவற்றில் காரச்சுவை அதிகம் உள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பது பழமொழி.

காரத்தில் மிளகு முதலிடம் வகிக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கவும், சீரணத்திற்கும் துணைபுரிகிறது. காரம் நாவிற்குச் சுவையையும், உடலுக்குச் சூட்டையும், உணர்வையும் தருகிறது.

காரம் உமிழ்நீர் சுரக்க உதவும். உமிழ்நீர் சீரணத்திற்கு உதவுகிறது. உணவை மெல்லும்போது உணவு உமிழ்நீரோடு கலப்பதால் நன்கு சீரணிக்கப்படுகிறது. உமிழ்நீர் வெளியில் எங்கும் விற்பனைக்குக் கிடைப்பதன்று. அதனால் உணவை நன்றாக மென்று பிறகுதான் உண்ண வேண்டும். 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது பழமொழி.

உணவுண்ணும்போது உணவுடன் உமிழ்நீர் கலந்து செல்ல வேண்டும். நாவில் உணவின் சுவை அறிய வேண்டும். அப்போது உடலுக்குத் தேவையற்ற கல், மண், நார், முடி போன்றவை நாவில், பற்களில் அகப்படும். உணவை நன்றாக மென்று உண்பதால் உணவும் சீரான முறையில் சீரணமாகும்.

காரம் அளவுடன் பயன்படுத்தினால் புண்களை ஆற்ற உதவும். அளவுக்கு அதிகமானால் அதற்கேற்றவாறு உடல் சூடு அதிகமாகும். மற்றும் உணர்ச்சிவசப்படுவது அதிகம் ஆகும். கண்கள் சிவந்து அத்துடன் கோபம் அதிகமாகும்.

வயிற்றில் புண் உண்டாகும். மலம் கழிவது மாறுபடும். மலம் கழியும்போதும், சிறுநீர் கழியும்போதும், எரிச்சல் உண்டாகும். வயிற்றில் சீரணிக்கும் தன்மை இயல்பு நிலையிலிருந்து மாறிவிடும்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...