கவுரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 ருபாய் ஊதியம் வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் முழுதும் உள்ள, 171 அரசு கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு, 11 மாதம் என்ற ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் பல்கலை மானிய குழு பரிந்துரைக்கும் உதவி பேராசிரியர் கல்வி தகுதி பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர் சிறப்பு தேர்வு எழுதி, பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

தற்போது, கவுரவ விரிவுரையாளர்கள் எவரையும், பல்கலை மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானிய குழு பரிந்துரைத்துள்ள மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை, தி.மு.க., அரசு அளித்துள்ளது.

இதை கண்டித்து, தமிழகம் முழுதும் கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

உடனே, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும். கடந்த, 2020 அரசாணையின்படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ள தகுதி வாய்ந்தவர்களை, அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...