கவுரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 ருபாய் ஊதியம் வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் முழுதும் உள்ள, 171 அரசு கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு, 11 மாதம் என்ற ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் பல்கலை மானிய குழு பரிந்துரைக்கும் உதவி பேராசிரியர் கல்வி தகுதி பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர் சிறப்பு தேர்வு எழுதி, பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

தற்போது, கவுரவ விரிவுரையாளர்கள் எவரையும், பல்கலை மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானிய குழு பரிந்துரைத்துள்ள மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை, தி.மு.க., அரசு அளித்துள்ளது.

இதை கண்டித்து, தமிழகம் முழுதும் கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

உடனே, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும். கடந்த, 2020 அரசாணையின்படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ள தகுதி வாய்ந்தவர்களை, அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...