அதிமுக உடன் கூட்டணி – அமித்ஷா விளக்கம்

தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது;

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அந்த மாநில இளைஞர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறுகின்றன.

தமிழகம் ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் முற்போக்கான மாநிலமாக கருதப்பட்டது. ஆனால் தி.மு.க., அரசின் தவறான கொள்கைகளால் தடுமாறி, குழப்பத்திற்கு ஆளாகி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்.

தமிழ் வழியில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை அறிமுகம் செய்யாமல் தி.மு.க., தமிழர்களுக்கு எதிரானதாக செயல்படுகிறது. இந்த படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று தி.மு.க.,விடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை.

தேசிய கல்விக் கொள்கையின் படி, தொடக்கக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கையின் போது நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் தி.மு.க.,வின் எதிர்ப்பு நிலை காரணமாக தமிழில் இந்த தேர்வு நடத்தப்படுவது இல்லை.

மகன் உதயநிதியை தமது வாரிசாக ஸ்டாலின் முன்னிறுத்துவதன் மூலம், வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார். அவர்கள் தேர்தலுக்காக மட்டுமே தற்போது தொகுதி மறு வரையறை பிரச்னையை கிளப்புகின்றனர். மத்திய அரசு தொகுதி மறுவரையறை குறித்து ஏதாவது சொன்னதா? இப்போது அதை ஏன் எழுப்பினார்கள்?

5 ஆண்டுகளாக அவர்கள் (தி.மு.க.)ஊழலில் ஈடுபட்டனர். இப்போது திடீரென முழித்துக் கொண்டு இருக்கின்றனர். வரையறை நிர்ணயம் செய்யப்படும் போது யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. அநீதி நடக்க 0.01 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

அ.தி.மு.க,வுடன் பா.ஜ., கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்தது. தேர்தலில் ஒருமுறை கூட மறு வாக்குப்பதிவு நடக்கவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசப்படவில்லை. முதல்முறையாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது பா.ஜ., வெற்றியல்ல. வெற்றி பெற்றவர்கள் அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மாநில அந்தஸ்து என்று வரும்போது பல அளவுகோல்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு உரிய மாநில அந்தஸ்தை உறுதி செய்வோம் என்று பார்லி.யில் பேசி இருக்கிறேன். பிரதமரும் அவ்வாறே பேசியுள்ளார்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...