வெண் தாமரைப் பூ

 இதய நோய்
இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை கூடும். இதனுடைய மகரந்தம் தூளை சேகரம் செய்து உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொஞ்சம் வெந்நீர் அருந்த நாளடைவில் ஆண்மை பெறுவான்.

இருதய நோய் நீங்க கஷாயம்
தேவையான வெண்தாமரை சுமார் ஐந்து இதழ்கள் கொண்டு வந்து உதிர்த்து, உதிர்ந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி அளவு தண்ணீரை அதில் ஊற்றி, அடுப்பில் வைத்து 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சர்க்கரை, போதுமான பசும் பால் சேர்த்து காலை – மாலை இருவேளை அருந்தவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் 20 நாட்கள் அருந்தி வரும் பட்சம், இருதய நோய்களுக்கும், இருதய வலிமைக்கும் உகந்தது.

இருதய படபடப்பு நீங்க
தேவையான வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி இறக்கி, அதில் உள்ள இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி, வைத்துக்கொண்டு, பிறகு மூன்று கைப்பிடி வல்லாரை இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து இடித்துக் கசக்கிப் பிழிந்த சாறு மூன்று தேக்கரண்டி அளவு சாற்றை இதழ்களின் பிழிந்த சாற்றில் கலந்து காலை – மாலை தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தி வர இருதய படபடப்பு நீங்கிக் குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால்
வெண்தாமரைக் கசாயம் செய்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவும், பெரியவர்களுக்கு 50 மில்லி வீதமும், ஒரு நாளைக்கு 3 வேலை கொடுக்க நாளடைவில் ஜன்னி தணிந்து குணம் தெரியும்.

மூளை வளர்ச்சிக்குக் குடிநீர்
முதலில் – தேவையான வெண்தாமரைப்பூ ஒன்றைக் கொண்டு வந்து ஓர் மண் பாண்டத்தில் உதிர்த்துப் போட்டு இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 100 மில்லி அளவாக சுண்டக் காய்ச்சி வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, வடிகட்டிய இந்த நீரை ஒரு வேளைக்கு 100 மில்லி வீதம் 3 வேளை அருந்த வேண்டும். இவ்விதமாக அரை மண்டலம் (20 நாட்கள்) அருந்தி வரும் பட்சம் மூளை தொடர்பாக ஞாபக சக்தியும் ஏற்படும். எந்தவிதக் குறைபாடும் இல்லாவிட்டாலும், மூளையின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு இது உகந்தது.

மனநோய் நீங்க
தேவையான வெண்தாமரையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் வைத்து 1 மண்டலம் (4o நாட்கள்) அருந்திவரும் பட்சம் இருதய நோயும், அதோடு மனநோயும் நீங்கிக் குணமாகும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...