வெண் தாமரைப் பூ

 இதய நோய்
இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை கூடும். இதனுடைய மகரந்தம் தூளை சேகரம் செய்து உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொஞ்சம் வெந்நீர் அருந்த நாளடைவில் ஆண்மை பெறுவான்.

இருதய நோய் நீங்க கஷாயம்
தேவையான வெண்தாமரை சுமார் ஐந்து இதழ்கள் கொண்டு வந்து உதிர்த்து, உதிர்ந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி அளவு தண்ணீரை அதில் ஊற்றி, அடுப்பில் வைத்து 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சர்க்கரை, போதுமான பசும் பால் சேர்த்து காலை – மாலை இருவேளை அருந்தவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் 20 நாட்கள் அருந்தி வரும் பட்சம், இருதய நோய்களுக்கும், இருதய வலிமைக்கும் உகந்தது.

இருதய படபடப்பு நீங்க
தேவையான வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி இறக்கி, அதில் உள்ள இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி, வைத்துக்கொண்டு, பிறகு மூன்று கைப்பிடி வல்லாரை இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து இடித்துக் கசக்கிப் பிழிந்த சாறு மூன்று தேக்கரண்டி அளவு சாற்றை இதழ்களின் பிழிந்த சாற்றில் கலந்து காலை – மாலை தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தி வர இருதய படபடப்பு நீங்கிக் குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால்
வெண்தாமரைக் கசாயம் செய்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவும், பெரியவர்களுக்கு 50 மில்லி வீதமும், ஒரு நாளைக்கு 3 வேலை கொடுக்க நாளடைவில் ஜன்னி தணிந்து குணம் தெரியும்.

மூளை வளர்ச்சிக்குக் குடிநீர்
முதலில் – தேவையான வெண்தாமரைப்பூ ஒன்றைக் கொண்டு வந்து ஓர் மண் பாண்டத்தில் உதிர்த்துப் போட்டு இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 100 மில்லி அளவாக சுண்டக் காய்ச்சி வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, வடிகட்டிய இந்த நீரை ஒரு வேளைக்கு 100 மில்லி வீதம் 3 வேளை அருந்த வேண்டும். இவ்விதமாக அரை மண்டலம் (20 நாட்கள்) அருந்தி வரும் பட்சம் மூளை தொடர்பாக ஞாபக சக்தியும் ஏற்படும். எந்தவிதக் குறைபாடும் இல்லாவிட்டாலும், மூளையின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு இது உகந்தது.

மனநோய் நீங்க
தேவையான வெண்தாமரையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் வைத்து 1 மண்டலம் (4o நாட்கள்) அருந்திவரும் பட்சம் இருதய நோயும், அதோடு மனநோயும் நீங்கிக் குணமாகும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...