வெண் தாமரைப் பூ

 இதய நோய்
இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை கூடும். இதனுடைய மகரந்தம் தூளை சேகரம் செய்து உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொஞ்சம் வெந்நீர் அருந்த நாளடைவில் ஆண்மை பெறுவான்.

இருதய நோய் நீங்க கஷாயம்
தேவையான வெண்தாமரை சுமார் ஐந்து இதழ்கள் கொண்டு வந்து உதிர்த்து, உதிர்ந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி அளவு தண்ணீரை அதில் ஊற்றி, அடுப்பில் வைத்து 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சர்க்கரை, போதுமான பசும் பால் சேர்த்து காலை – மாலை இருவேளை அருந்தவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் 20 நாட்கள் அருந்தி வரும் பட்சம், இருதய நோய்களுக்கும், இருதய வலிமைக்கும் உகந்தது.

இருதய படபடப்பு நீங்க
தேவையான வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி இறக்கி, அதில் உள்ள இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி, வைத்துக்கொண்டு, பிறகு மூன்று கைப்பிடி வல்லாரை இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து இடித்துக் கசக்கிப் பிழிந்த சாறு மூன்று தேக்கரண்டி அளவு சாற்றை இதழ்களின் பிழிந்த சாற்றில் கலந்து காலை – மாலை தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தி வர இருதய படபடப்பு நீங்கிக் குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால்
வெண்தாமரைக் கசாயம் செய்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவும், பெரியவர்களுக்கு 50 மில்லி வீதமும், ஒரு நாளைக்கு 3 வேலை கொடுக்க நாளடைவில் ஜன்னி தணிந்து குணம் தெரியும்.

மூளை வளர்ச்சிக்குக் குடிநீர்
முதலில் – தேவையான வெண்தாமரைப்பூ ஒன்றைக் கொண்டு வந்து ஓர் மண் பாண்டத்தில் உதிர்த்துப் போட்டு இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 100 மில்லி அளவாக சுண்டக் காய்ச்சி வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, வடிகட்டிய இந்த நீரை ஒரு வேளைக்கு 100 மில்லி வீதம் 3 வேளை அருந்த வேண்டும். இவ்விதமாக அரை மண்டலம் (20 நாட்கள்) அருந்தி வரும் பட்சம் மூளை தொடர்பாக ஞாபக சக்தியும் ஏற்படும். எந்தவிதக் குறைபாடும் இல்லாவிட்டாலும், மூளையின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு இது உகந்தது.

மனநோய் நீங்க
தேவையான வெண்தாமரையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் வைத்து 1 மண்டலம் (4o நாட்கள்) அருந்திவரும் பட்சம் இருதய நோயும், அதோடு மனநோயும் நீங்கிக் குணமாகும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...