“பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை ” பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார். நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன” எனப் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவிப் பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். என் இதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. என் மகள்களின் குங்குமத்திற்கு (சிந்தூர்) பழிவாங்குவதாக நான் சபதம் செய்திருந்தேன், மகாதேவின் ஆசிர்வாதத்துடன் அதை நிறைவேற்றினேன். சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவின் பாதங்களில் அர்ப்பணிக்கிறேன்.
பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |