அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

 அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

அகத்தியில் இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூக்களையுடையது அகத்தி என்றும் செந்நிறப் பூக்களை உடையது செவ்வகத்தி என்றும் பெயர் பெரும். இதன் இலை, பூ, வேர், பட்டை எல்லாம் மருந்து பொருள்களாக உபயோகப்படுகிறது. இதன் சுவை கைப்பும், கார்ப்பும் உடையது. இந்தக் கீரை முறைப்படி சமைத்து உண்டால், விஷநீக்கி, குளிர்ச்சி உண்டாக்கும். வெப்பதையகற்றும். மலமிளக்கி செரிப்பு உண்டாக்கும்.

 

இக்கீரையின் சாற்றை எடுத்து மூக்கில் 2 சொட்டு மூக்கிலிட நான்காம் முறை சுரம் விலகும். சாதாரண நாட்களில் சாற்றை உடம்பின் மீது பூசி வர வெப்பம் தணியும். சிரசிற் தேய்த்து தலை மூழ்க பைத்தியம் தணியும். தேனும். சாரும் கலந்து உச்சியில் தடவ சிறுவர்கள் நீர்க்கோவை போகும். இதையே மூக்கிலிட, நீர்க்கோவை, தலைவலி இவை தீரும். இலையை அரைத்துப் புற்கை செய்து, காயங்களுக்குக் கட்ட காயங்கள் ஆறும்.

 

இலையைச் சமைத்துண்பது போல், இதன் பூவையும் சமைத்துண்ண, வெயிலாதிகளாலும் புகையிலை சுருட்டு முதலியவைகளாலும், பிறந்த பித்த தோடத்தையும் உடலிற்தோன்றும் வெப்பம் தணியும்.

 

சளி, இருமல், தும்மல் குணமாக
அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் எடுத்து தேன் விட்டுச் சாப்பிட சளி, இருமல், தும்மல் இவைகள் நீங்கும்.

மலச்சிக்கல் குணமாக
காய்ச்சிய பசும் பாலுடன் அகத்திப் பூவைச்சேர்த்து சாப்பிட்டு வர நாளடைவில் உடல் உஷ்ணம் தணியும். இப் பூவையும் பருப்புச் சேர்த்து கூட்டாகச் சமைத்து உண்ணலாம். மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் சக்தி இதற்குண்டு.

இருதய பலம் பெற
தேவையான அளவு அகத்தி பூவை எடுத்து சுத்தம் பார்த்து ஆய்ந்து அத்துடன் பருப்பு வகையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் நாளடைவில் இருதய பலம் பெரும்.

அகத்திப் பூவில் கால்ஷியம் சத்து அதிகமுள்ளது. எனவே எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவையும் உறுதியையும் தரவல்லது.

குடற்புண் ஆற
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, கைப்பிடி அளவு அகத்திக் கீரையும், பூவையும் எடுத்து சாறு பிழிந்து சுமார் 2 அவுன்ஸ் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நாளடைவில் குடற்புண் ஆறி விடும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...