இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறை தான் இந்துத்துவா

 இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறை தான் இந்துத்துவா என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவின் கட்டாக்கில் ஒடியாமொழி வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் மோகன்பகவத் பேசியதாவது: இங்கிலாந்தில் வாழ்பவர்களை ஆங்கிலேயர்கள் என்கிறோம்.. ஜெர்மனில் வாழ்பவர் களை ஜெர்மானியர்கள் என்கிறோம்.. அமெரிக்காவில் வாழ்பவர்களை அமெரிக்கர்கள் என்கிறோம்.

ஆனால் இந்த இந்துஸ் தானில் வாழ்பவர்களை ஏன் இந்துக்கள் என அழைப்பதில்லை? கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப் படுகின்றனர். இந்துத்துவா என்பது வாழ்க்கைமுறை. இந்துக்கள் என கூறப்படுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தகடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். கடவுள்வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாககூட இருக்கலாம்.

விவேகானந்தர் கூறியதை போன்று கடவுளை வழி படாதவன் நாத்திகவாதி அல்ல; சுயநம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி. ஆதி காலம் முதல் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா மட்டும்தான் என உலகம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் உள்ள சிலர்மட்டும் அதனை புரிந்து கொள்ளாமலும், தவறாக புரிந்துகொண்டும் மத பேதங்களை ஏற்படுத்துகின்றனர். உலகெங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்தஇருளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வும் ஆறுதலும் இந்தியாவில்தான் உள்ளது என உலகம் உணர்ந்துகொள்ள துவங்கியுள்ளது. ஏனெனில் இன்றுவரை இந்தியா வாழ்க்கை நெறிகளின் அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது; அந்த வாழ்க்கைதர்மத்தை அனைவரும் புரிந்துகொண்டால் உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும். ஆனால் அந்த தர்மம் இந்நாட்டை விட்டு சென்றுவிட்டால் இந்த நாடு பிளவுபட்டு அழிவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...