அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது. சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உங்களுக்காக எட்டு டிப்ஸ்கள்…

* வெதுவெதுப்பான நீரில் 'ஷவர்பாத்' குளியல் போடுவது நல்லது. அப்போது, உடலின் மேற்புறத்தோலில் காணப்படும் நுண்ணிய துவாரங்களில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்குகின்றன.

* மனஅழுத்தமும் சருமத்தைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க யோகா, பிராணயாமம் போன்ற பயிற்சிகள் செய்வது நல்லது. மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக காபி, மதுபானங்கள் போன்றவற்றை அருந்தக்கூடாது.

* குளிக்கும்போது அழுக்கை நீக்கும் தரமான, வீரியம் குறைந்த சோப்பை உபயோகிக்க வேண்டும். தரமான சோப்பு கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களை சிதைத்து சருமத்திற்கு கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது.

* கொழுப்புச்சத்தே இல்லாத உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. இது சருமம் வெளிறிப்போவதற்கு காரணமாகி விடுகிறது. அதனால், போதுமான அளவிற்கு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் தோல் ஈரப்பதமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மீன், முட்டை மற்றும் அவரை, மொச்சை போன்ற நார்ச்சத்துள்ள தானியங்கள், வேர்க்கடலை, பச்சைக் காய்கறிகள் போன்றவை சருமத்துக்குத் தேவையான சத்தான உணவுப் பொருட்களாகும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது தோலில் சுருக்கங்களும், இடுப்பளவு விரிவடைந்தும் விடுகிறது. அதனால், புரதச்சத்துக்கள் நிறைந்த கடலை மற்றும் தானியங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.

* பெரும்பாலானவர்கள் கழுத்தின் அழகில் கவனம் செலுத்துவது இல்லை. அதனால், கழுத்தின் பின்பகுதியில் அதிகப்படியான அழுக்கு தேங்கி விடுகிறது. கழுத்தை அழகாக்க, முகத்திற்கு போடும் 'ஆன்டியாக்சிடண்ட் சீரம்' உள்ள கிரீமை பயன்படுத்தலாம். இது, சூரியஒளி படும்போது தோல் கறுப்பு நிறமாக மாறிவிடாமல் பாதுகாக்கிறது.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மது, முகத்தில் உள்ள மெல்லிய ரத்தநாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. சருமத்திற்கு சிறந்த ஆன்டியாக்சிடண்ட் ஆக பணிபுரியும் வைட்டமின் 'ஏ' சத்தை தோலில் இருந்து உறிஞ்சுகிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் உண்டாகின்றன. இதைத் தவிர்க்க தினமும் 6 முதல் 8 டம்ளர் வரை நீர் அருந்துவது நல்லது.

* சருமம் இரவில் தான் புத்துணர்ச்சி அடைகிறது. அதனால் தினமும் கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு சீராக நடைபெறும்.

அழகு குறிப்பு, அழகு குறிப்புகள், அழகு குறிப்புக்கள், அழகு குறிப்புகள

One response to “அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...