”வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை மதிப்போம்; இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வோம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

குடியரசு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது நாட்டுக்கு நம் கடமைகளை நினைவுபடுத்துவதாகும். பல நாடுகளில் பன்முகத்தன்மை உள்ள மக்கள் வாழ்கின்றனர்.

ஆனால், அங்கெல்லாம் மோதல் உள்ளன. பாரதத்தில் மட்டும்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வாழ்க்கையின் இயற்கையான ஒன்றாக நாம் ஏற்றுள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் என தனிச் சிறப்புகள் இருக்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையும், மற்றவர்களுடன் இணைந்த ஒன்று.

உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, நம் சுற்றுப்புறத்தையும், நாட்டையும் பார்க்க வேண்டும்.

நம் தேசியக் கொடியில் உள்ள தர்மசக்கரம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சியை காண்பதே, நாட்டின் வளர்ச்சி. நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது, மற்றவர்கள் முன்னேறவும் உதவிட வேண்டும்.

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். இதையே நம் தேசியக் கொடி, அதில் உள்ள வண்ணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தர்மசக்கரம் ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...