”வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை மதிப்போம்; இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வோம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

குடியரசு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது நாட்டுக்கு நம் கடமைகளை நினைவுபடுத்துவதாகும். பல நாடுகளில் பன்முகத்தன்மை உள்ள மக்கள் வாழ்கின்றனர்.

ஆனால், அங்கெல்லாம் மோதல் உள்ளன. பாரதத்தில் மட்டும்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வாழ்க்கையின் இயற்கையான ஒன்றாக நாம் ஏற்றுள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் என தனிச் சிறப்புகள் இருக்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையும், மற்றவர்களுடன் இணைந்த ஒன்று.

உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, நம் சுற்றுப்புறத்தையும், நாட்டையும் பார்க்க வேண்டும்.

நம் தேசியக் கொடியில் உள்ள தர்மசக்கரம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சியை காண்பதே, நாட்டின் வளர்ச்சி. நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது, மற்றவர்கள் முன்னேறவும் உதவிட வேண்டும்.

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். இதையே நம் தேசியக் கொடி, அதில் உள்ள வண்ணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தர்மசக்கரம் ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...