ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனைய மாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்

 சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனைய மாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகெளடா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவது குறித்து தெற்குரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தார்.

ராயபுரம் ரயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு மாற்றாக ரயில் முனையமாக்க விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். அதற்காக முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில் ராயபுரம் முதல் அத்திப்பட்டு வரை நடை மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தநிலையில், ரயில்வே அமைச்சர் சதானந்தகெளடா வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் ராயபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிபார்த்தார். அங்கிருந்த ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து, தெற்குரயில்வே அதிகாரிகளுடன் திட்டவரைவுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியது: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவது குறித்து ஆய்வுசெய்ய வந்தேன். முனையம் அமைப்பதற்காக இடங்கள் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து தேவையான இடங்களை கேட்டுப்பெற்று பணிகளை விரைவில் தொடங்குவோம்.

மேலும் தமிழக முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதப்படும். ஆனால் முனையமாக்கும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற காலவரம்பெல்லாம் தெரிவிக்கக் கூடியசூழல் இப்போது இல்லை என்றார்

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கம்பியில்லா இணையசேவையை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்குரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் மனோகரன், சென்னைக் கோட்டமேலாளர் மிஸ்ரா, ரயில் நிலைய மேலாளர் கோவிந்த சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்டெல், இந்த சேவையை அளிக்கும். இதன்மூலம் சென்ட்ரலுக்கு வரும்பயணிகள் தடையின்றி இணையதள சேவைகளை தங்கள் மடிக்கணினி, செல்பேசிகளில் பெறமுடியும். இந்தச் சேவை இப்போது பரிசோதனை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. முதல் 30 நிமிஷங்களுக்கு இந்தச்சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர், கட்டணம்செலுத்தி பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...