நன்னாரியின் மருத்துவ குணம்

 நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்தக் கஷாயத்துடன் பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் விலகும்.

இதே கஷாயத்தைக் குழந்தைகளுக்குக் காலை, மாலை சங்களவு கொடுத்து வந்தால் கணைச் சூடு குணமாகும்.

இதன் சுவை இனிப்பும், சிறு கைப்பும் உடையது. இதைப்போட்டு நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்து நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், உடல் வலுப்பெறும். உடலைத் தேற்றி வலு உண்டாக்கும். உடலைக் குளிற்சியடையச் செய்யும். வியர்வையையும், சிறுநீரையையும் பெருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து கஷாயமிட்டு 5 மில்லி 10 மில்லி வீதம் தினம் 2,3 வேளை கொடுத்துவர, நாட்பட்ட வாதம், மேகப்புடை, சருமரோகம், மந்தாக்கினி, அஜீரணம் இவை நீங்கும்.

வேரை உலர்த்திப் பொடித்துப் பசுவின் பால் சேர்த்து நீர் சுருக்கு முதலிய மூத்திர சம்பந்தமான வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம். மேற்படி நோய்களுக்கு நன்னாரி வேர், சீரகம் சேர்த்து குடி நீரிட்டும் குடிக்கலாம். நன்னாரி வேரை இடித்து 100 கிராம் எடுத்து ½ லிட்டர் வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதில் 750 கிராம் சீனி சர்க்கரை சேர்த்து சிறிது இட்டு எரித்துப் பதத்தில் இறக்கி, வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து உட்கொள்ள, அதி வெப்பம் தணியும், நன்னாரியை வாழை இலையில் சுற்றிக் கட்டுக் கும்பிச் சாம்பலுள் புதைத்து வைத்து எடுத்து நரம்பு நீக்கி, அத்துடன் வெல்லம், சீரகம் சேர்த்தரைத்துக் கொடுக்க மூத்திரத்தாரை ரோகம் நீங்கும்.

வேரின் இரசத்தைக் கண்ணில் விட கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நன்னாரி, அதிமதுரம், கோட்டம், வசம்பு, இவற்றைக் காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து மேல் பூசிவர, பித்தத்தால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இதை அரைத்துத் தேனில் பாகம் செய்துன்ன, அதி பித்தம் தீரும். இதைக் கற்றாளைச் சோற்றுடன் கலந்து உண்ண வண்டுகடி போகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...