நன்னாரியின் மருத்துவ குணம்

 நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்தக் கஷாயத்துடன் பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் விலகும்.

இதே கஷாயத்தைக் குழந்தைகளுக்குக் காலை, மாலை சங்களவு கொடுத்து வந்தால் கணைச் சூடு குணமாகும்.

இதன் சுவை இனிப்பும், சிறு கைப்பும் உடையது. இதைப்போட்டு நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்து நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், உடல் வலுப்பெறும். உடலைத் தேற்றி வலு உண்டாக்கும். உடலைக் குளிற்சியடையச் செய்யும். வியர்வையையும், சிறுநீரையையும் பெருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து கஷாயமிட்டு 5 மில்லி 10 மில்லி வீதம் தினம் 2,3 வேளை கொடுத்துவர, நாட்பட்ட வாதம், மேகப்புடை, சருமரோகம், மந்தாக்கினி, அஜீரணம் இவை நீங்கும்.

வேரை உலர்த்திப் பொடித்துப் பசுவின் பால் சேர்த்து நீர் சுருக்கு முதலிய மூத்திர சம்பந்தமான வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம். மேற்படி நோய்களுக்கு நன்னாரி வேர், சீரகம் சேர்த்து குடி நீரிட்டும் குடிக்கலாம். நன்னாரி வேரை இடித்து 100 கிராம் எடுத்து ½ லிட்டர் வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதில் 750 கிராம் சீனி சர்க்கரை சேர்த்து சிறிது இட்டு எரித்துப் பதத்தில் இறக்கி, வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து உட்கொள்ள, அதி வெப்பம் தணியும், நன்னாரியை வாழை இலையில் சுற்றிக் கட்டுக் கும்பிச் சாம்பலுள் புதைத்து வைத்து எடுத்து நரம்பு நீக்கி, அத்துடன் வெல்லம், சீரகம் சேர்த்தரைத்துக் கொடுக்க மூத்திரத்தாரை ரோகம் நீங்கும்.

வேரின் இரசத்தைக் கண்ணில் விட கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நன்னாரி, அதிமதுரம், கோட்டம், வசம்பு, இவற்றைக் காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து மேல் பூசிவர, பித்தத்தால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இதை அரைத்துத் தேனில் பாகம் செய்துன்ன, அதி பித்தம் தீரும். இதைக் கற்றாளைச் சோற்றுடன் கலந்து உண்ண வண்டுகடி போகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...