நன்னாரியின் மருத்துவ குணம்

 நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்தக் கஷாயத்துடன் பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் விலகும்.

இதே கஷாயத்தைக் குழந்தைகளுக்குக் காலை, மாலை சங்களவு கொடுத்து வந்தால் கணைச் சூடு குணமாகும்.

இதன் சுவை இனிப்பும், சிறு கைப்பும் உடையது. இதைப்போட்டு நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்து நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், உடல் வலுப்பெறும். உடலைத் தேற்றி வலு உண்டாக்கும். உடலைக் குளிற்சியடையச் செய்யும். வியர்வையையும், சிறுநீரையையும் பெருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து கஷாயமிட்டு 5 மில்லி 10 மில்லி வீதம் தினம் 2,3 வேளை கொடுத்துவர, நாட்பட்ட வாதம், மேகப்புடை, சருமரோகம், மந்தாக்கினி, அஜீரணம் இவை நீங்கும்.

வேரை உலர்த்திப் பொடித்துப் பசுவின் பால் சேர்த்து நீர் சுருக்கு முதலிய மூத்திர சம்பந்தமான வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம். மேற்படி நோய்களுக்கு நன்னாரி வேர், சீரகம் சேர்த்து குடி நீரிட்டும் குடிக்கலாம். நன்னாரி வேரை இடித்து 100 கிராம் எடுத்து ½ லிட்டர் வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதில் 750 கிராம் சீனி சர்க்கரை சேர்த்து சிறிது இட்டு எரித்துப் பதத்தில் இறக்கி, வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து உட்கொள்ள, அதி வெப்பம் தணியும், நன்னாரியை வாழை இலையில் சுற்றிக் கட்டுக் கும்பிச் சாம்பலுள் புதைத்து வைத்து எடுத்து நரம்பு நீக்கி, அத்துடன் வெல்லம், சீரகம் சேர்த்தரைத்துக் கொடுக்க மூத்திரத்தாரை ரோகம் நீங்கும்.

வேரின் இரசத்தைக் கண்ணில் விட கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நன்னாரி, அதிமதுரம், கோட்டம், வசம்பு, இவற்றைக் காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து மேல் பூசிவர, பித்தத்தால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இதை அரைத்துத் தேனில் பாகம் செய்துன்ன, அதி பித்தம் தீரும். இதைக் கற்றாளைச் சோற்றுடன் கலந்து உண்ண வண்டுகடி போகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...