அத்தியின் மருத்துவ குணம்

 சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ஐந்தும்,அத்திப்பட்டையில் ஒரு கைபிடியளவும் எடுத்து அம்மியில் நன்றாக நைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ப்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும்பொழுது மூலத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கழுவி வர வேண்டும். இப்படி காலை, மாலை செய்து வந்தால் மூலம் சுருங்கி உள்ளேயே நின்று விடும்.

 

மலச் சிக்கலை நீக்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிடலாம்,
நாள்பட்ட மலச் சிக்கலை குனபடுத்த 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்

ஒரு கைப்பிடியளவு அத்திப்பட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை வடிகட்டி புண்ணை கழுவி துடைக்க வேண்டும். பிறகு எந்த மருந்தைப் போட்டாலும் ஆறாத புண்ணும் ஆறும்.

 

நீண்டநாள் நோய் வாய்ப்பட்டிருந்தவர் விரைந்து குணம் பெற உதவும். முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உணவாக கருதப்பட்டு. உடல் மற்றும் மனம் சார்ந்த சிரமத்தை நீக்கும். உடம்பின் ஆற்றலை, திடத்தைப் புதுப்பித்துக் கொடுக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் அதிக அளவு இரத்தப்போக்கு வயிற்றுக்கடுப்பு, ஈரல் அழற்சி குணம் காண 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்துடன் தேன் கலந்து உண்ணலாம். நீரிழிவிலும் நல்ல பலனளிக்கும். உலர்ந்த பழக்கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் சரியாகும்.

மலச்சிக்கல்


பறித்த பலமாகவோ, உலர்த்தியதாகவோ எப்படி இருந்தாலும் அது மலமிலக்கியாக செயல்படும். குடலில் குவிவது போன்ற அல்லது அலை மாதிரியான அசைவுகளை தூண்டும்.

மூலம்


மலமிளக்கிப் பண்பு காரணமாக இது மூலத்தை குணப்படுத்தவும் உதவும். இரண்டு அல்லது மூன்று பழங்களை ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். காலையில் உட்கொள்ளலாம். அதே மாதிரி மாலையிலும் பழங்களை உண்ணலாம். மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை நீக்கும். அவ்விதமாக ஆசனவாய் பிதுக்கத்தை தடுக்கும். அத்திப்பழத்தை மேற்சொன்னவாறு 3-4 வாரங்கள் தொடர்ந்து உண்டுவர மூலநோய் குணமாகும்.

ஆஷ்துமா


கபத்தை உலரச் செய்வதன்மூலம் ஆஷ்துமா நோயாளிக்கு ஓர் சவுகர்ய உணர்வைத்தரும்.

பால் சார்ந்த பலவீனம்


வாதுமை, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களுடன் அத்திப்பழத்தையும் சேர்த்து உண்ண வேண்டும். வெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். பால் சார்ந்த பலவீனத்தைப் போக்குவதில் இது நிகரற்றது.

கவனத்திற்கு அத்திப்பழத்தை உபயோகிப்பதற்கு முன் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். உலர்ந்த பழத்தின் தோல் கடினமாக இருக்கும் என்பதால் ஊறவைத்து உண்ண வேண்டும் அது எளிதில் சீரணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...