அத்தியின் மருத்துவ குணம்

 சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ஐந்தும்,அத்திப்பட்டையில் ஒரு கைபிடியளவும் எடுத்து அம்மியில் நன்றாக நைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ப்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும்பொழுது மூலத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கழுவி வர வேண்டும். இப்படி காலை, மாலை செய்து வந்தால் மூலம் சுருங்கி உள்ளேயே நின்று விடும்.

 

மலச் சிக்கலை நீக்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிடலாம்,
நாள்பட்ட மலச் சிக்கலை குனபடுத்த 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்

ஒரு கைப்பிடியளவு அத்திப்பட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை வடிகட்டி புண்ணை கழுவி துடைக்க வேண்டும். பிறகு எந்த மருந்தைப் போட்டாலும் ஆறாத புண்ணும் ஆறும்.

 

நீண்டநாள் நோய் வாய்ப்பட்டிருந்தவர் விரைந்து குணம் பெற உதவும். முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உணவாக கருதப்பட்டு. உடல் மற்றும் மனம் சார்ந்த சிரமத்தை நீக்கும். உடம்பின் ஆற்றலை, திடத்தைப் புதுப்பித்துக் கொடுக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் அதிக அளவு இரத்தப்போக்கு வயிற்றுக்கடுப்பு, ஈரல் அழற்சி குணம் காண 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்துடன் தேன் கலந்து உண்ணலாம். நீரிழிவிலும் நல்ல பலனளிக்கும். உலர்ந்த பழக்கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் சரியாகும்.

மலச்சிக்கல்


பறித்த பலமாகவோ, உலர்த்தியதாகவோ எப்படி இருந்தாலும் அது மலமிலக்கியாக செயல்படும். குடலில் குவிவது போன்ற அல்லது அலை மாதிரியான அசைவுகளை தூண்டும்.

மூலம்


மலமிளக்கிப் பண்பு காரணமாக இது மூலத்தை குணப்படுத்தவும் உதவும். இரண்டு அல்லது மூன்று பழங்களை ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். காலையில் உட்கொள்ளலாம். அதே மாதிரி மாலையிலும் பழங்களை உண்ணலாம். மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை நீக்கும். அவ்விதமாக ஆசனவாய் பிதுக்கத்தை தடுக்கும். அத்திப்பழத்தை மேற்சொன்னவாறு 3-4 வாரங்கள் தொடர்ந்து உண்டுவர மூலநோய் குணமாகும்.

ஆஷ்துமா


கபத்தை உலரச் செய்வதன்மூலம் ஆஷ்துமா நோயாளிக்கு ஓர் சவுகர்ய உணர்வைத்தரும்.

பால் சார்ந்த பலவீனம்


வாதுமை, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களுடன் அத்திப்பழத்தையும் சேர்த்து உண்ண வேண்டும். வெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். பால் சார்ந்த பலவீனத்தைப் போக்குவதில் இது நிகரற்றது.

கவனத்திற்கு அத்திப்பழத்தை உபயோகிப்பதற்கு முன் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். உலர்ந்த பழத்தின் தோல் கடினமாக இருக்கும் என்பதால் ஊறவைத்து உண்ண வேண்டும் அது எளிதில் சீரணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...