மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .

 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .

 ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் வல்லவர். அதை நான் பார்த்திருக்கிறேன். பிகார் மக்களும் அதை ரசித்த துண்டு. ஆனால், அண்மைக் காலமாக லாலுவுக்கும், நிதீஷுக்கும் இடையே குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவது, உண்மைக்கு புறம்பான தகவல் களை கூறுவது என பல விஷயங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதுபோல, வேடிக்கை காட்டுவதிலும் அவர்களிடையே போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமார் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தியதை நான் நேற்று பார்த்தேன். தனது ஆதரவாளர்கள், செய்தியாளர்களை அருகில் வைத்து கொண்டு கவிதையை ஒப்பித்தார். இதுபோன்ற வேடிக்கையின் மூலம், லாலுவை மிஞ்சிவிடலாம் என் அவர் நினைக்கிறார்.

 மகாகூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், "த்ரி இடியட்ஸ்' (ஆமிர் கான் நடித்த பிரபல ஹிந்திப் படம்) படத்திலிருந்த பாடலை, அவர் ஏன் தனது நிகழ்ச்சிக்கு தேர்வுசெய்தார் என்பதை பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன். கவிதையை நையாண்டியாக தெரிவிக்க விரும்பினால், த்ரி இடியட்ஸ் படம் ஏன் அவரது ஞாபகத்துக்கு வந்தது? இது போன்ற வேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு இன்னும் சிலவாரங்கள் உங்களுக்கு இருக்கிறது. அதன்பிறகு, உங்களது ஐந்து, ஆறுசேவகர்களை அழைத்து, வேடிக்கை காட்டுங்கள் நிதீஷ்குமார்.

பயிற்சி செய்யுங்கள். திறமையை வளர்த்து கொள்ளுங்கள். நவம்பர் 8ம் தேதிக்குப்பிறகு, அதுபோன்ற வேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவதற்கு உங்களுக்கு அதிகவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, உங்களது வேதனை குறித்து பாடுங்கள். ஒரு வரை விட்டுவிட்டு, மற்றொருவருடன் கூட்டணிசேர்ந்தது குறித்து பாடுங்கள். இவையெல்லாம் குறித்து கவிதை எழுதுங்கள். கண்ணீர்விடுங்கள்.

 தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், மகாகூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. இதனால், பொய்சொல்வது, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம்செய்யும் செயல்களில் அக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

 மந்திரவாதியை சென்று நிதீஷ் குமார் பார்த்த சம்பவமானது, அவரிடையே நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற மாந்திரீகம் அவர்களை காப்பாற்றுமா? அனைத்து பாதைகளும் மூடப்பட்டுவிட்டதாக கருதுவோர்தான், மந்திரவாதிகளை நாடுவார்கள்.

 பிகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தருவேன் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்தவாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், பல இடங்களில் பல நாள்களுக்கு பிறகே மின்சாரம் வருகிறது. பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சிக்குவந்தால், 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார் பிரதமர் மோடி.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...