கோவனின் புத்தி கோணலாக இருந்தால்?

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியதாக கோவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நடு இரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஒரு பாடலுக்காக என்று என்னிடம் ஒரு பாடலைக் காண்பித்தார்கள்.  பாடலைப் பார்த்த பின்புதான் அதில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு ஆட்சேபகரமாக வேறேதும் இல்லை.

டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதற்காக ஏன் கைது செய்ய வேண்டும்?  டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வது, எல்லோருடைய கருத்தோடு ஒத்த கருத்துத்தானே!  அதனால் இதற்காக கைது அவசியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.  ஆனால் அதே கோவன் பாடிய மற்றொரு பாட்டை கேட்க நேர்ந்தது அதில் டாஸ்மாக்கை மூடு என்று கருத்து சொல்லாமல் முதலமைச்சரையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தி கேட்கத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடுவதை நோக்கமாக கொள்ளாமல் தலைவர்களை கொச்சைப் படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.  

கருத்து சுதந்திரமாக இருந்திடினும் அது ஒருவரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதும், மாற்றுக் கருத்தை விமர்சனம் செய்தாலும் அந்த விமர்சனம் மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து.

அதனால் கோவன் அவர்கள் முதல்பாடல் கருத்து சுதந்திரமாகவும் மற்ற பாடல் களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.  அதனால் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கருத்து சுதந்திரம் என்பது களங்கமேற்படுத்தும் சுதந்திரமாக இருந்து விடக் கூடாது என்பதும், எல்லாவற்றிருக்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதை கோவன் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் கைதிற்கு கண்டனம் சொன்ன தலைவர்கள் கூட அவரின் இந்த இரண்டாவது கொச்சைப்படுத்தும் பாடலைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றி கொள்வார்கள்.  கருத்து சொல்வதும் சட்டத்திற்குட்பட்டதாக இல்லையென்றால், சட்டம் தனது கடமையை செய்துதான் ஆகவேண்டும் என்பதை நான் இங்கே வலியுறுத்துகிறேன்.

                                 

     இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...