வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது

 தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின், சென்னையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது;  தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க, தமிழக அரசு தவறி விட்டது. 'வெள்ளம் ஏற்படும்' என்ற அறிவிப்பைக்கூட மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முன் கூட்டியே வெளியிட தமிழக அரசு தவறி விட்டது. மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.அங்கீகரிக்கபட்ட வீட்டுமனைகளில் கூட கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால்,.வெள்ளம்வடிய வாய்ப்பு இல்லை. சென்னை, வேளச்சேரி அருகே, ஓடை ஒன்றின் மீது அரசே  சாலை அமைத்துள்ளது. இந்தசாலைக்கு நடுவே ஓடை நீர் செல்ல, சிறுபாதை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மழை நீர் தேங்கி, குடியிருப்புகளுக்குள் சென்று கடும்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் ஆயிரக் கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மேற்குதாம்பரத்தில் உள்ள பள்ளியில், முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம், மாநகராட்சியின் குப்பைகிடங்கு அருகே உள்ளது. குப்பை கிடங்கு அருகே, பள்ளி இருப்பதே தவறு; இந்நிலையில், அங்கு முகாமும் அமைத்துள்ளனர்.மழையால் குப்பைநனைந்து, எங்கு பார்த்தாலும் ஈக்கள், கொசுகள் அதிகம் தென்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மீட்பு பணிகளையும், நோய்தடுப்பு பணிகளையும், தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக வெள்ளபாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் செயலருடன், தமிழக தலைமைசெயலர் ஞானதேசிகன் பேசியுள்ளார். அப்போது, 'உடனடி நிவாரணம்வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்க வில்லை. 'நிலைமையை சமாளித்துக் கொள்கிறோம்' என, கூறிவிட்டனர். தேசியபேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒவ்வொரு மாநில அரசுக்கும் உடனடி தேவையை சமாளிக்க, மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்தநிதியை, மாநில அரசுகள் பேரிடர்காலத்தில் உடனடியாக பயன் படுத்தலாம்;

வெள்ளம் பாதித்தபகுதிகளில், தமிழக அரசு சார்பில், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பாதிக்கபட்டவர், பாதிக்கப்படாதவர் என, அனைத்து தரப்புக்கும் இத்தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசுசார்பில், இத்தொகை எதற்காக வழங்கு கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...