அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. வரலாறுகாணாத அளவில் பெய்த கன மழைக்கு சென்னை மாநகரம் ஸ்தம்பித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது . வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்கு வரத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. சாலைகளில் போக்கு வரத்தும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளநிலவரம் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலை பேசி வழியாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்து ள்ளதாக முதல்வர் தெரிவித்ததாக தெரிகிறது.

தொடர்மழையால் தமிழகம் அவதியுற்றுவரும் துரதிருஷ்டவசமான இந்நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் முழுஒத்துழைப்பும் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...