நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தை தேசநலன்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பயன் படுத்துவதாகவும், அக்கட்சியின் சுய நல அரசியலுக்காக நாட்டின் வளர்ச்சியை பணயம் வைப்ப தாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிபிஐ-யை மத்திய அரசு ஏவுவதாகக்கூறி, அக்கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், அவை நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 12ம் தேதி முதல், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், இளைஞர்களின் மேம்பாட்டுக்கான ஆளுமைத்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியல் காரணமாக, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு, அக்கட்சியின் குறுகிய மனப் பான்மை உடைய சுயநல அரசியலே காரணமாகும்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டுநடத்தியதற்காக, பிரதமர் மோடி மீது கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்துக்கும் பிரதமரைக் குற்றம்சாட்டுவது, தற்போது வழக்கமாகி விட்டது. யாருக்காவது வயிற்றுவலி ஏற்பட்டாலும், பிரதமர் மோடிதான் காரணம் என்று கூறுவார்கள் போலும்.
நாடாளுமன்ற செயல் பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக, பிரச்னைகளையும், பொய்களையும் உருவாக்கி போலியான சண்டைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்றார் நக்வி.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.