பொருளாதாரத்தை காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்

மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வர்த்தக மாநாட்டில் பொருளா தாரத்தைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தக மாநாட்டின் நேற்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தமாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டினை அருண் ஜெட்லி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்சியில் அருண்ஜெட்லி பேசியதாவது:- பாஜக., அரசின் பலமே தேசியபாதுகாப்பு என்று வரும்பொழுது அதற்காக எதையும் சமரசம்செய்யாமல் இருப்பதுதான். பொருளாதாரத்தை காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசின் வளர்ச்சியும் கட்டாயம் முக்கியமானது. அரசியல் வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு வலிமையான மாநிலங்கள்தான் வலிமையான இந்தியா. தற்போது நாட்டில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் வருவாய் பற்றாக்குறை உள்ளவையாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் மேற்கு வங்காள மாநிலம் 6 முதல் 7 சதவீதம் ரை பங்களிப்பு செய்கிறது. மேற்குவங்காள மாநிலத்தை பொறுத்த வரை கடந்த 40 வருடங்களாக மாநில அரசின் கொள்கையால் பாதிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் யார்யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும்நிச்சயம். பா.ஜ.க., மட்டும் யாருடனும் கூட்டணி அமைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...