. சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக. முழு வீச்சில் பணியை தொடங்கியுள்ளது

தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு சில மாநிலங்களைத்தவிர அனைத்து இடங்களிலும் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 24–ம் தேதி அவர் மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற நிலை ஏற்படும் அளவுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு முன்பைவிட கூடுதலாக 71 சதவீதம் மின்சாரம் பகிர்மானம் செய்யப்படுகிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் அனைத்து துறைகளும் தமிழகத்திற்கு உதவியாக இருந்துவருகின்றன. தமிழகத்தில் பெரும்வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசு அளித்த உதவியால் மிகவிரைவிலேயே மீண்டு எழ முடிந்தது.

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே பேரவையின் இறுதி கூட்டத்தொடரான இந்த கூட்டத்திலேயே மது விலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கவேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காக 2 மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக. முழு வீச்சில் பணியை தொடங்கி யுள்ளது. இத்தேர்தலில் மக்களுக்கு பயன் தரும் கூட்டணி அமைக்கப்படும்.
 
வருகிற 25–ந் தேதி முதல் அடுத்தமாதம் (பிப்ரவரி) 5–ம் தேதிக்குள் 234 பேரவைத்தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்சிசார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்பமனு பெறும் தேதி சிலதினங்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...