வழிபட வந்த இடத்தில் உயிரிழப்பு ஒப்புக் கொள்ள முடியாதது

இன்று தை அமாவாசை.  இந்துக்களுக்கு மிகவும் புனிதமானநாள்.  பூவுலகில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல பூவுலகை விட்டு சென்றவர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள்.  அமாவாசை நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறவர்களும் குடும்பத்திலிருந்து பிரிந்து மறைந்த முன்னோர்களுக்கு சாந்தி செய்யும் நாள்.  அந்த நாளில் அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக நீர்நிலைகளோடு அமைந்துள்ள கோவில்களில் கூட்டம் அலைமோதுவது நாம் அறிந்ததே.  

ஆக கூட்டம் கூடும் எதிர்பார்ப்புள்ள கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.  தடுப்பு நடவடிக்கைகள் தேவை.  பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.  இவையெல்லாமும் நாம் அறிந்ததே.  ஆனால் இவ்வளவு அறிந்தும் இன்று திருவண்ணாமலையில் தீர்த்தவாரியில் சடங்கு செய்ய அலைமோதிய கூட்டத்தில் கூட்ட நெரிசலினால் கரையிலிருந்து நீருக்குள் தள்ளப்பட்டு 4 பேர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

கூட்டம் கூடும் தன்மையும் இந்த நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கோவில் நிர்வாகமும் அறநிலைதுறையும் காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.  இறைவனை வழிபட வந்த இடத்தில் உயிரிழப்பு என்பது எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள முடியாததொன்று.

இத்தகைய விபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு அரசு தகுந்த இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அதுவும் குறிப்பாக மகாமகம் போன்ற ஆன்மீக விழாக்களில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும், இந்த ஆண்டில், வரும் காலத்தில் நடைபெற உள்ளதால் இன்னும் மிக அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேண்டும் என்பதையும் எச்சரித்துள்ளது இந்த சம்பவம்.

தமிழக அரசு இத்தகைய நிகழ்வுகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இத்தகைய கூட்டம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை, அவசர சிகிச்சை மையங்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் போன்றவற்றையும் அதிக எண்ணிக்கையிலும் அதிக கவனத்துடனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

        இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...