உத்தரப் பிரதேசத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து அவர், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக பெரும் பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும்.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள், தேசவிரோதம் எனக் கருதுகிறீர்களா? அல்லது கருத்து சுதந்திரம் என கருதுகிறீர்களா? என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம், குறிப்பாக ராகுல்காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்.
இந்தக் கேள்வியை நான் கடந்த ஆறு நாள்களாக எழுப்பி வருகிறேன். ஆனால், ராகுல் அதற்கு பதிலளிக்காமல் மெளனம் சாதித்துவருகிறார். பாஜக தொண்டர்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஜேஎன்யு விவகாரத்தை எழுப்பவேண்டும். தேச விரோத கோஷங்களை ஜனநாயக நாட்டில் எழுப்புவதற்கு ஆதரவளிக்க கூடாது. அவ்வாறு எழுப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அமித் ஷா
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.