பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பது குறித்து இறுதி செய்வதற்காக, மத்திய மந்திரியும், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை சென்னைவந்தார் தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவை என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

இதுபற்றி முடிவு செய்வதற்காக மத்திய மந்திரியும், தமிழக பாஜக. தேர்தல் பொறுப் பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை  வந்தார். பிரகாஷ் ஜவடேகரை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்துபேசினார். அதனை தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ. ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும், இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் கூட்டணிகட்சிகள் குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார். இன்று  தேமுதிக. தலைவர் விஜயகாந்தை பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...