தமிழக சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் முதல்பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மத்திய மந்திரியும், பாஜக தமிழக தேர்தல் பொறுப் பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:–
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிலகட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. அந்தகட்சிகளுடன் சேர்ந்து நாங்கள் தேர்தலை சந்திப்போம்.
மக்கள் பிரதமரையும், பாஜக.,வையும் நேசிக்கிறார்கள். திராவிடகட்சிகள் தமிழகத்துக்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்ததைவிட மேலும் சிறந்தவகையில் பாரதீய ஜனதா மக்களுக்கு தொண்டாற்றும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், செயல்பாட்டில் நம்பிக்கைகொண்ட தமிழக மக்கள் கண்டிப்பாக பாரதீய ஜனதாவை இந்ததேர்தலில் பெருவாரியாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.
எங்கள் கட்சியின் தமிழக சட்டசபை தேர்தல்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெறுகிறது. இந்தகுழு வேட்பாளர்களை முடிவுசெய்யும். பின்னர் இந்தகுழுவினர் டெல்லிவந்து எங்களை வெள்ளிக்கிழமை (இன்று) சந்திப்பார்கள். அன்று பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும் இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.