பயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க அதி நவீன பாதுகாப்பு

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப் பதற்காக, இந்தியாவின் மேற்கு எல்லையில் சுமார் 2,900 கி.மீ. தொலைவுக்கு அதி நவீன தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 இந்த பாதுகாப்பு வசதிகளால், பதான்கோட் போன்ற பயங்கரவாத தாக்குதல்களையும், கடத்தல் களையும் முற்றிலுமாகத் தடுக்க முடியும்.


 இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், திங்கள் கிழமை கூறியதாவது:
 பாகிஸ்தான் எல்லை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி), இரவு காண் கருவிகள், கண்காணிப்பு ராடார் கருவிகள், பூமிக்கு அடியில் நிகழ்வதை உணரும்கருவிகள், லேசர் தடுப்புகள் ஆகிய 5 விதமான அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த எல்லை பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படும்.

இந்தக் கருவிகள் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், எல்லை பகுதியில் ஆள்கள் நடமாட்டத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து குஜராத் மாநிலம்வரை பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஆற்று வழித்தடங்கள், மலைப் பகுதிகள் என 130 இடங்கள் வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலும் அந்த பகுதிகளில் இருந்துதான் ஊடுருவல் காரர்கள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். அந்த இடங்களில் லேசர் தடுப்புகள் அமைப்பதால், ஊடுருவல் காரர்களின் அத்துமீறலைக் கண்டுபிடித்துவிட முடியும்.


 எல்லை பகுதியில் அமைக்கப்படவுள்ள ராடார்கருவியும், சிசிடிவி கேமராவும், 24 மணி நேரமும் எல்லா கோணங்களிலும் சுழன்று படம்பிடிக்கும் தன்மை கொண்டதால், ஊடுருவல் காரர்களுக்கு இந்தியத் தரப்பில் இருந்து உதவி செய்வோரை பாதுகாப்பு படையினர் எளிதில் பிடித்துவிடலாம்.


 சோதனை முயற்சியாக, ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 5 கி.மீ. தொலைவுக்கு இந்த கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவின் மேற்கு எல்லையில் சுமார் 2,900 கி.மீ. தொலைவுக்கு, ஒருங்கி ணைந்த எல்லை பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...