தேசத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில்வைத்து பிரதமர் செயல்படுகிறார்

தமிழகத்தில் மத்திய அரசு செயல் படுத்த முயலும் பல நலத் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்காமல் முட்டுக்கட்டைபோட்டார் என பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

பட்டுக்கோட்டை, மதுரை, தென்காசி, நாகர்கோவில் ஆகியஇடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பாஜக தலைவர் அமித்ஷா பேசினார்.

அமித்ஷா பிரச்சாரப்பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்:

1. தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசுவேண்டுமா அல்லது அதிமுக, திமுக போன்ற ஊழல் அரசுகள் வேண்டுமா என்பதை வாக்காளர்கள் சிந்தித்து இந்தத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, திமுக இடையே எந்தவேறுபாடும் இல்லை. ‘அ’ என்ற ஒரு எழுத்தைத்தவிர. மற்றபடி, இருவரும் தமிழகத்தை போட்டி போட்டுச் சுரண்டியவர்கள்.

2. மத்தியில், 2014-ல் நடைபெற்றதேர்தலில், 30 ஆண்டுகளாக இந்த நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டு, மோடி தலைமையிலான அரசு அமைந்தது. அதுபோன்ற தொடக்கம், தமிழகத்திலும் ஏற்பட வேண்டும். மீண்டும், மீண்டும் திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காமல், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவுகொடுங்கள். இங்கேயும் ஒரு மாற்றத்தை தொடங்கலாம்.

3. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து ரூ.12 லட்சம்கோடி ஊழல் புரிந்துள்ளன. பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல், ஆகாயத்தில் 2 ஜி ஊழல் என எவற்றையும் விட்டுவைக்க வில்லை. அதிமுகவின் தலைவியோ சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைசென்றவர். இவர்களுக்கு ஊழலைத்தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக, அதிமுக.,வால் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ஒரு போதும் கொடுக்க முடியாது.

4. நாடு முழுவதும் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக, குழந்தைகள் அருந்தும் பால்கொள்முதலிலும் கலப்படம் செய்து ஊழல் நடந்துள்ளது. இது, வருந்தத் தக்கது. ஆற்று மணலில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடியை அதிமுக அரசு கொள்ளை யடித்துள்ளது. மோடி ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு, துன்புறுத்தல் போன்றவை நடைபெறு வதில்லை.

5. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, மாநில அரசு தூங்கி கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரணமாக வழங்கினார். ஆனால், அந்த நிதியை மீண்டும் வெள்ளபாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்தாமலும், ‘அம்மா’ பெயரில் அனைவருக்கும் தலா ரூ.5,000 வழங்கப் பட்டுள்ளது.

6. மத்தியில் 2 ஆண்டுகளாக பாஜக தலைமையில் ஊழலற்ற ஆட்சிநடைபெற்று வருகிறது. தேசத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில்வைத்து பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மோடி பிரதமரான பிறகு 2 ஆண்டுகளில், தமிழகமீனவர்கள் யாரும் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப் படவில்லை. தேசத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி ஊழலின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

7. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிசெய்து வருகிறார். அதற்கு தமிழக அரசு உரியஅனுமதி கொடுக்காமல் முட்டுக் கட்டை ஏற்படுத்தி வருகிறது.

8. ஏழை பெண்களுக்கு இலவச காஸ்சிலிண்டர், ரூ.180 கோடியில் கிராமப்புற சாலைமேம்பாடு, முத்ரா திட்டத்தில் இளைஞர்களுக்கு சுய தொழிலுக்கு நிதியுதவி, கரும்பு விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு என்று பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதாவின் அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மீண்டும் அவருக்கு வாக்களித்தால் இதுபோன்ற பல்வேறு நல்ல திட்டங்களும் தமிழகத்துக்கு கிடைக்காமல் போய்விடும்.

9. 24 மணிநேரம் மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான உதய் ஜோதி திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முன்வந்தது. இதற்கு ஜெயலலிதா அனுமதிக்க வில்லை. இதுபோல் மத்திய அரசின் பல நலத்திட்டங்களை தமிழக அரசு ஊழல்மூலம் வீணாக்கிவிட்டது. ஊழலற்ற ஆட்சியைவழங்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

10. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஊழல் புரிந்துள்ளன. தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல ஒரே வழி பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பது மட்டும் தான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...