மேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி

மேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி என்ற தங்களது முரண் பாடான நிலைப்பாடு குறித்து காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்கள்மன்றத்தில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வலியுறுத்தினார்.


 இதுதொடர்பாக பாஜக சார்பில், கேரளமாநிலம் திருச்சூரில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:


 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ள காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், கேரளமாநில பேரவைத்தேர்தலில் எதிரெதிர் அணியாக களம் காணுகின்றன. மேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி என்ற தங்களின் முரண்பாடான நிலைப்பாடு குறித்து இருகட்சிகளும் மக்கள் மன்றத்தில் உரியவிளக்கம் அளிக்க வேண்டும்.


 காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கேரளத்தில் அண்மையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனது தேசப்பற்று குறித்து பாஜக கேள்வி எழுப்புவதாக அவர் ஆதங்கப் பட்டார். சோனியா காந்தியின் தேச பக்தியை நாங்கள் நன்றாக அறிவோம். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம்கோடி அளவுக்கு ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன. அப்போது எங்கே போனது அவரது நாட்டுப்பற்று?


 கேரளத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்கள் சுமார் 250 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், இந்தவன்முறை மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக அடிபணியாது. கேரளத்தில் ஆட்சி அமைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...