ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்துவரும் ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவுகள்  இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக.,வும், மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் கட்சியும்  முன்னிலை வகித்து வருகின்றன. இதையொட்டி ஜெயலலிதாவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு  பேசினேன். தேர்தலில் வெற்றிபெற்றதை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

அதே போல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவரின் அபார  வெற்றிக்கும், இரண்டாவது முறையாக தனது  ஆட்சியை தொடங்குவதற்கும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து   கொள்கிறேன்.அசாம்,மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு எனது நன்றிகளை  தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு சேவைசெயய் இன்னும் கடினமாக உழைப்போம் என இதன் மூலம் உறுதியளிக்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.அதேபோல் ஜெய லலிதாவுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி  தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் ரோசய்யா, ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் ஆகியோர்  வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...