உலகை மிரட்டும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் இந்தியா-

எல்லாவற்றிலும் சீனாவோடு போட்டி போடும் மோடி இந்த சூப்பர் கம்ப்யூட்டரை மட்டும் விட்டு வைத்து விடுவாரா… என்ன..வாருங்கள் அதிலும் ஒரு கை ஆடிபார்ப்போம் என்று இந்தியாவிலேயே அதி வேக சூப்பர் கம்ப்யூட்டர்க ளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்க உத்தர விட்டுள்ளார்.

இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட் டர், தற்போது உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்ட ரான
ஜப்பானின் கே கம்ப்யூட் டர், சீனாவின் தியான்கே-2 அமெரிக்காவின் டைட்டன் ஜெர்மனியின் ஜூகுயின் போன்ற சூப்பர் கம்யூட்டர்களை எல்லாம் ஓரங்கட்ட வேண்டும் என்ற முடிவில் உருவாக்கப்படுகிறது.

சாதாரணமாக சூப்பர் கம்ப்யூட்டரின் வேகத்தை பீட்டா பிளாப்ஸ் என்ற அளவுகளில் சொல்கிறார்கள்.அதாவது
சீனாவின் தியான்கே-2 சூப்பர் கம்ப்யூட்டரின் ஸ்பீட் எவ்வ ளவு தெரியுமா..33.86 பீட்டா பிளாப்ஸ் ஆகும்.ஒரு பீட்டா பிளாப்ஸ் என்பது நமக்கு தெரிந்த ட்ரில்லியன் அளவில் 1000 ட்ரில்லியன்தான் ஒரு ஒரு பீட்டா பிளாப்ஸ் ஆகும்.
அதாவது 1க்கு அருகில் 15 ஸீரோக்களை சேர்க்க வேண் டும். அதாவதுஒரு நொடிக்கு 3,386, 000, 000, 000, 000,000
கட்டளைகளை இந்த கம்யூட்டர் பரிசீலிக்கிறது என்றால் இதனுடைய செயல்பாடு எப்படி இருக்கும்..கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

உதாரணத்துக்கு சொல்வதென்றால் சுமார் 20 லட்சம் லேப்டாப்புகள் ஒரே நேரத்தில் செய்யும் வேலையை இந்த
தியான்கே-2 சூப்பர் கம்ப்யூட்டர் செய்கிறது.

சீனாவின் தியான்கே-2 சூப்பர் கம்ப்யூட்டரின் ஸ்டோரேஜ் எவ்வளவு தெரியுமா..12.4PB அதாவது.12.4 பீட்டா பைட்டா கும்.நாம்வீட்டில் இப்பொழுது தான் ஒரு டிபி இரண்டு டிபி கார்ட்டி ஸ்குகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். ஆனால் சீனாவின் சூப்பர்கம்ப்யூட்டரில் 124,000, 000, 000, 000,000பைட்ஸ் என்ற அளவில் ஹார்ட்டிஸ்குகள் உள்ளது. இந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க சீனாவுக்கு 2478 கோடிரூபாய் செலவானதாக சொல்கிறது.

ஆனால் இந்தியா உருவாக்க உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் இதை விட வேகத்திலும் ஸ்டோரேஜிலும் அதிகமாக இரு க்கும் படிஉருவாக்கப்பட உள்ளது.எஸ்டிமேட் எவ்வளவு தெரியுமா?4500 கோடியாகும்.அப்படி என்றால் இந்த சூப்பர் கம்ப்யூட்ட ரின் ஸ்பீடு நிச்சயம் பீட்டா பிளாப்சையும் தாண் டி எக்ஸா பிளாப்சில் தான் இருக்கும்.

இந்த திட்டத்திற்காக ரூ.4,500 கோடி ரூபாய் அளவில் செல வு செய்யப்பட்டு மத்திய உயர்கணணி மேம்பாட்டு மையம் இந்த சூப்பர் கம்ப்யூட்டரினை தயாரித்து வருவ தாக மத்தி ய அரசின் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள் ளது.இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் உருவாக்கம் அடுத்த ஆண் டு ஆகஸ் டு மாதம் முடிவடைந்து பாரத பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

அது மட்டுமல்லாமல் அடுத்த ஏழு ஆண்டுகளில் சுமார் 80 சூப்பர் கம்ப்யூட்டர்களைஉருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறப்படுகின்றது.ஏன்னா சீனாவில் சுமார் 70 சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டர் இருக்குது. தற்பொழுது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில், இந்தியா தற்போது 58வது இடத்தில் உள்ளது.அடுத்த ஆண்டு பாருங்கள் இந்தியா.அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும்.

இப்பொழுதும் இந்தியாவில் 12 சூப்பர்கம்ப்யூட்டர் உள்ளது ஆனாலும் உலக தர வரிசையில் அனைத்தும் 100,200,300 க்கும்மேல் உள்ள வரிசையிலேயே உள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சகஸ்த்ரத் என்ற சூப்பர் கம்ப்யூட்டர்தான் உலகிலேயே 96 வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான பரம்
உருவாகி 25 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் நாம் இன்று ம் உலகள வில் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குவதில் 50 வது இடத்துக்கு மேல் இருப்பதை நினைத்து நாம் வருத்தப் படவேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...