ஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்தார்

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து ஹீரட்மாநிலத்தில், ஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்திருக்கிறார்.

நீர்மின் அணைத்திட்டத்தின் நிறைவை குறிக்க திரு. நரேந்திர மோடி நேற்று, ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அந்தத்திட்டம் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவில் தயாரானது.

முதன்முதலில் 1976-ல் மேற்கு ஹீரட் மாநிலத்தில் அணை கட்டப்பட்டது. தொண்ணூறுகளில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் அது சேதம டைந்தது. சுமார் 1,500 இந்திய, ஆப்கானிய பொறியாளர்களால் அணை மீண்டும் கட்டப் பட்டதாக இந்தியவெளியறவு அமைச்சு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானின் எதிர் காலத்திற்கு நம்பிக்கையை அளிப்பதோடு மின் சாரத்தையும் அதுவழங்கும் என்று திரு. மோடி கூறினார். அணை 100 மீட்டர் உயரமும், 540 மீட்டர் அகலமும்கொண்டது.

அது 42 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதோடு 75,000 ஹெக்டேர் விவசாயநிலத்திற்கு நீர்பாய்ச்ச உதவும் என்று இந்தியப்பிரதமர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் சீரமைப்பு திட்டங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் இந்தியா 1 பில்லியன் டாலருக்குமேல் வழங்கியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள், எல்லை பதற்றங்கள் ஆகியவை காரணமாக பாகிஸ்தானுடன் உறவு மோச மடைந்துள்ள நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்திவருகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...