எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது விரைவில் அனுமதி

பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது தொடர்பான பரிந்து ரைக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.

எஸ்பிஐ மற்றும் அதன் 5 சிறிய வங்கிகளோடு பாரதிய மகிளா வங்கி யையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அதற்கு அரசு அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று ஜேட்லி கூறினார்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் எதிர் கால நடவடிக்கை குறித்து வங்கிகளின் தலைவர்களோடு நிதி அமைச்சர் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கூறியது: இப்போதைக்கு எஸ்பிஐ பரிந்துரை மட்டுமே அரசு எதிர்நோக் கியுள்ளது. வங்கிகளை இணைப்பது தொடர்பான பாரத ஸ்டேட்வங்கியின் பரிந்துரைக்கு அரசு பதிலளிக்க வேண்டி யுள்ளது. பொதுவாக வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதைத் தான் பட்ஜெட் உரையின் போதும் வலியுறுத்தி யிருந்தேன் என்று ஜேட்லி கூறினார்.

அரசின் ஒப்புதல் எவ்வளவு விரைவில் வெளியாகும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எஸ்பிஐ வங்கிஇணைப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக ஜேட்லி பதிலளித்தார்.

கடந்த மாதம் பாரதஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு எஸ்பிஐ ஒப்புதல்அளித்தது. இந்த ஒப்புதல் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட்பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட்பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 வங்கிகளில் ஸ்டேட்பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவங்கிகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வையாகும்.

வங்கிகள் இணைக்கப் பட்டால் ரூ.37 லட்சம் கோடி பரிவர்த்தனையோடு 50 கோடி வாடிக்கை யாளர்களைக் கொண்ட பெரியவங்கியாக எஸ்பிஐ உருவாகும்.

2008-ம் ஆண்டு பாங்க் ஆப் சௌராஷ்டி ராவை தன்னுடன் இணைத்துக் கொண்டது எஸ்பிஐ. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தூர் இணைக்கப்பட்டது.

வங்கி இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ எடுத்துவந்தாலும் போதிய மூலதனம் இல்லாததால் அவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவங்கிக்கும் குறைந்தது ரூ.2 ஆயிரம்கோடி மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் வங்கி ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பு காரண மாகவும் இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ-யால் கடந்தகாலங்களில் மேற்கொள்ள முடியவில்லை.

எஸ்பிஐ வங்கிகள் ஒருங்கிணைக்கப் பட்டால் அது நிர்வகிக்கும் தொகை ரூ.37 லட்சம் கோடியாக இருக்கும். வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயரும். ஏடிஎம்களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயரும்.

எஸ்பிஐ-க்கு மட்டும் நாடுமுழுவதும் 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் 36 நாடுகளில் உள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...