பண்டிட்கள் இல்லாமல் காஸ்மீர் முழுமையாகாது-காஸ்மீர் முதல்வர்

மோடி அரசின் சாணக்கியத்தனம் மெல்ல மெல்ல வே லை செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். ஏனெ ன்றால் இது வரை அமைதியாக இருந்த காஸ்மீர் முதல்வர்மகபூபா முப்தி நேற்று காஸ்மீர் பண்டிட்கள் பற்றி திருவாய் மலர்ந்து பண்டிட்கள் இல்லாமல் காஸ் மீர் முழுமையா காது என்று கீர் பவானி கோயிலில் வை த்து கூறியிருக் கிறார்.அதோடு பண்டி ட்களை காஸ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் குடியமர்த் துவது பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்.

புள்ளி வைத்தாகி விட்டது.இது கோலமாக உருவாகுமா இல்லை அதுவே முற்று புள்ளியாகி விடுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

நாட்டில் கண்ணையா குமார் மாதிரியான அரை லூசுகள் காஷ்மீர் இந்தியாவுக்குசொந்தமானது அல்ல.அது பாகி ஸ் தானுக்கு சொந்தமானது என்று உளறிக் கொண்டிரு ப்பார் கள். ஆனால் உண்மையிலேயே அந்த மண்ணு க்கு சொந்த க்காரர்களான பண்டிட்கள் பற்றி யாரும் பேசுவதி ல்லை.ஏனென்றால் பண்டிட்கள் பற்றி பேச ஆரம்பித்தா ல் இந்தியாவில் காஸ்மீரில் நடந்த மத மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல துவங்கினால் உலகளவில் ஐஎஸ்ஐ எஸ்தீவிரவாதிகள் தற்பொழுது செய்து கொண்டிருக்கு ம் வேலையை 25 ஆண்டுகளுக்கு முன் காஸ்மீர் தீவிர வாதி கள் செய்ததால் காஸ்மீர் பண்டிட்கள் பாதிபேர் ஊரை விட் டும் மீதி பேர் உலகை விட்டும் ஓடிப்போன வரலாற்றை.சொல்லியாக வேண்டும்.

1990 ம் ஆண்டு ஜனவரி 19 ம் தேதி அன்று காஸ்மீரில் உள் ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் , காஷ்மீர் பண்டித ர்களை இஸ்லாம் சமயத்திற்கு எதிரான பாவி கள் அதாவது காபிர்கள் என அறிவித்தார்கள். முடிந்தா ல் மதம் மாறுங்கள்இல்லை என்றால் ஓடிபோங்கள் என் று மிரட்ட பட்ட பண் டிட்களில் ஒரு சிலர் முஸ்லிம் மத த்துக்கு மாறி விட் டார் கள்.நிறைய பேர் தங்களின் அ டையாளத்தை இழக்க விரு ம்பாமல் காஸ்மீரை விட் டு ஓடி வந்து ஜம்முவிலு ம் டெல்லியிலும் வாழ்கிறார்கள்
.
அப்படி அவர்களை துரத்தி அடித்தவர்கள் யார் என்று பார்த் தால் அவர்களும் ஒரு காலத்தில் ஹிந்துக்களாக இருந்த வர்கள் தான்.13ம் நூற்றாண்டு வரை ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்த காஸ்மீர் பள்ளத்தாக்கில் 13 ம் நூற்றா ண்டுக்கு பிறகு தான் முஸ்லிம்கள் நுழைய ஆரம்பித்த னர்.பிறகு கொஞ்சகொஞ்சமாக முஸ்லிம்களின் எண்ணி க்கை பெருகியது.

இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்ததும் டில்லியை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் பக்கத்தில் இருந்த காஸ்மீ ரையும் கைப்பற்றி தங்களின் மதத்தினை பரவ வைத்தா ர்கள்.இதில் விசேஷம் என்ன வென்றால் இந்த பண்டிட் என்ற பெயரே காஸ்மீர் பிராமணர்களுக்கு அக்பர் கொடு த்த பட்டம் தான் காலப்போக்கில் இனத்தின் அடையாள மாகி விட்டது.

ஆறு நூற்றாண்டுகளாக காஸ்மீர் பள்ளத்தாக்கில் பெருகி வந்த முஸ்லிம்கள் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலே யே பெரும்பான்மையாக மாறியிருந்தார்கள்.அப்புறம் என்ன..கொஞ்ச கொஞ்சமாக மதம் மாறாத பண்டிட்கள் காஸ்மீரில் இருந்து விரட்டப்பட்டனர்.இப்படி விரட்டப் பட்ட பண்டிட்க ளின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் இருக்கும்.

காஸ்மீரில் இருந்த பண்டிட்கள் சைவ சமயத்தை பின் பற்றிய பிராமணர்கள்தான் வசுகுப்தர், சோமநந்தர், அபிநவ குப்தர் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தில் சைவம் வள ர்த்த மகான்கள் மாதிரி காஸ்மீரில் சைவம் சிறக்க பாடு பட்ட மகான்கள்.

இப்பொழுது ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் இருக்கும் விசேஷ அதிகாரமான பிரிவு 370 ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்க்ள் அசையாச் சொத்து க்கள் வாங் க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்க ள் வாங்கலாம்.

அடுத்து இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநி லத் தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனா ல் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய் து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்..

இந்த பிரிவின் நோககமே எக்காலத்திலும் பாலஸ்தீனத் திற்குள் யூதர்கள் திட்டமிட்டு இடங்கள் வாங்கி குடியே றி தங்களின் சொந்த பூமியை கைப்பற்றிக் கொண்டார் களோ அப்படி எதிர்காலத்தில் இந்துக்கள் இடங்கள் வாங் கி குடி யேறி காஸ்மீரை கைப்பற்றி கொள்வார்களோ என்கிற பயத்தி னால் சேக் அப்துல்லா நேருவை மிரட்டி காரியம் சாதித் ததே இந்துக்கள் காஸ்மீரை முழுவதும் இழப்பதற்கு வகையாகி விட்டது.

தற்பொழுது ஜம்மு காஸ்மீரில் பிஜேபி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.எவ்வளவு நாட்கள் இந்த ஆட்சி நடை பெறும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கின்ற காலத்தில் இந்துக்கள் இழந்த உடைமைக ளை மீட்டு அவர்களை மீண்டும் காஸ்மீரில் குடியமர்த்தி னால் போதும்..பிஜேபிக்கு வாக்களித்த மக்கள் காலம் காலமாக நன்றியுடன் இருப்பார்கள்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...