சுவாதியின் கொலையைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் நாளை ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை மிகவும் மோசமாகிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூலிப் படை களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கி யுள்ளது. அவர்களை ஒடுக்க அரசு தீவிரமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத் தக்கது. கொலைசெய்தவரை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகமோசமாக இருப்பதை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது. இதில், கட்சிசார்பின்றி அனைத்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.