பாலாற்று தடுப்பணை விவகாரம் தமிழக, ஆந்திர முதல்வர்கள் நேரில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

பாலாற்று தடுப்பணை விவகாரம்குறித்து, தமிழக, ஆந்திர முதல்வர்கள் நேரில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர், வேலூர் மாவட்டம், ராணிப் பேட்டையில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை கூறியதாவது: மத்திய அரசுவேறு, மாநில அரசு வேறு என்ற நிலைமாறி ஒன்றுபட்டு மக்கள்பணி செய்வோம் என்ற நோக்கில் "தீம் இந்தியா' என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திரமோடி ஒருதிட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஸ்கோயல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில்சந்தித்து பேசுகையில்,

தமிழக அரசுக்கு,மத்திய அரசு தொடர்ந்து உதவிசெய்ய தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண்மை பயிர் பாதுகாப்புத்திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்திகட்டும் விவகாரத்தில், இருமாநில முதல்வர்களும் நேரில்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...