ஆனந்த் சர்மா, சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்த பிரதமர்

மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவுக்கு அவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் வியாழக்கிழமை கேள்விநேரம் முடிந்ததும், பிரதமர் தனது இருக்கையை விட்டு எழுந்து, எதிர்க்கட்சி வரிசைக்கு நடந்துசென்றார். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் சர்மாவுடன் அவர் கைகுலுக்கினார். அதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரிடம் சென்ற பிரதமர், அவருடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, திமுக உறுப்பினர் கனிமொழி, நியமன உறுப்பினர் அனுஆகா உள்ளிட்ட எம்.பி.க்கள் பிரதமர் அருகில் சென்று, வணக்கம் தெரிவித்தனர். சரத்பவாருடன் பேசிய பிறகு மோடி, அவையை விட்டுப் புறப்பட்டுச்சென்றார். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக அவர் பவாருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மாநிலங்க ளவையில் பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத்திரட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...