மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல

இன்று நம் சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் சேவை திருவெற்றியூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின் மோடி அரசு மூலமாக, மத்திய அரசின் பங்களிப்போடு இது சாத்தியமாகி இருக்கிறது.


 சென்ற ஆட்சியின் போது தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருவெற்றியுர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வட சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தியிருந்தோம்.  நானும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதும் ஆகியிருக்கிறேன்;.  
அந்த வகையில் பொதுமக்களின் தொடர் வேண்டுகோளினால் இது சாத்தியமாயிருக்கிறது.  இதற்கு அனுமதியளித்தது மற்றும் விரைவு படுத்தியதில் மத்திய அரசின் பங்கு முக்கியமானது. 

ஆனால் மெட்ரோ திருவெற்றியுர் வரை விரிவாக்கம் நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு வெங்கையா நாயுடுஜியும் கலந்து கொள்வது மகிழ்;ச்சி.  ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரங்களில் நிச்சயம் பாரத பிரதமரின் படம் இடம் பெற்றிருக்க வேண்டும்.  விளம்பரங்களில் முதல்வரின் படம் தேவையில்லை என்று தீர்ப்பு வந்த போது… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்று பெருமையுடம் கருத்து சொன்னவர்கள் நாம்.  


ஆனால் மத்திய அரசின் பங்களிப்போடு நடக்கும் திட்டங்களில் பிரதமரின் படமும் இடம் பெறுவது நியாயமானதாக இருக்கும்.  தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு தனது பங்களிப்பை பல திட்டங்களில் சிறப்பாகவே செய்து வருகிறது.  ஆனால், அந்த பங்களிப்பை மறைப்பது சரியல்ல.  
வருங்காலங்களில் மத்திய அரசின் பங்களிப்பிலான திட்டங்கள் இருப்பின, அதற்கான் விளம்பரங்களில் மக்கள் மத்த்pயில் தன் செயல்களால் இடம் பெற்ற பிரதமர் மோடியின் படமும் இடம் பெற வேண்டும் என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இத்தகைய விளம்பரங்களுக்கு பிரதமர் விருப்பப்பட மாட்டார்.  ஆனாலும் மத்திய அரசின் பங்களிப்பை விளக்குவது நமது கடமை.

              

இப்படிக்கு
                                        என்றும் மக்கள் பணியில்
                                            
                                 (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...