மத்திய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழு

மத்திய நிதியுதவியின் கீழ் செயல்படும் திட்டங்களை கண்காணிக்க உள்ளூர் எம்பி தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக.,வின் நாடாளுமன்றகுழு கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் கட்சித்தலைவர் அமித்ஷா, மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது மத்திய நிதியுதவியின் கீழ் செயல்படும் திட்டங்களை கண்காணிக்க உள்ளூர் எம்பி தலைமையில் மாவட்டளவிலான குழு அமைக்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இதை அனைத்து எம்பிக்களும் பயன் படுத்தி திட்டங்கள் சிறப்பாக நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இக்குழுவின் முதல்கூட்டம் அடுத்த மாதம் நடக்கும் என்றும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பாஜக எம்பிக்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார்,‘‘இந்தக் கூட்டத்தொடரில் பினாமி பணபரிவர்த்தனைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக் களை நிறைவேற்ற அரசு ஆர்வமாக உள்ளது.

மக்களவையில் 5 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் நிறைவேறுவதில் தொடர்ந்து சிக்கல்நீடிக்கிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பட்டியலிட்டபடியே நாடாளுமன்ற அலுவல்களை அரசு நடத்திவருகிறது. இந்தகூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்களும், நான்கு புதியமசோதாக்களும் நிறைவேற்ற அரசு பரிசீலித்துவருகிறது’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...