சட்டமன்றம் நடைபெறவேண்டும் என்பதில் எல்லோருக்கும் அக்கறை உள்ளது உண்மை. ஆனால் சட்டமன்ற நடவடிக்கைகளை வளாகத்தில் நடித்துக் காட்டியது அநாகரிகத்தின் உச்சகட்டம். அதுவும் அதில் எதிர்க் கட்சித் தலைவரே பங்கெடுத்துக் கொண்டது சரியான நடைமுறை அல்ல.
ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கைக்கு இத்தகைய நடைமுறை சரியான பதில்கிடையாது. இவர்கள் இருவரின் நடவடிக்கை தமிழகத்திற்கு நிச்சயம் ஓர் மாற்றம்தேவை என்பதை தெளிவுபடுத்துகிறது. இனிமேலாவது சட்டமன்றம் ஆரோக்கியமாக நடைபெறவேண்டும் என்பதை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் உறுதிசெய்ய வேண்டும்.
மத்தியில் பாராளுமன் றத்தில் எவ்வளவு வெளிநடப்புகள் இருந்தாலும் ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு உதாரணமாக 100 நாட்களில் 100 மசோதா க்களை நிறைவேற்றி சாதனை புரிந்திருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 164 மட்டுமே.ஆக மக்களுக்கு நல்லது நடப்பதற்கு நல்ல திட்டங்கள் சட்ட மன்றத்தில் நடைபெற வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு பயன் படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இனிமேலாவது சட்டமன்றம் அமைதியாகவும், ஆக்க பூர்வமாகவும் நடைபெற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கொள்பவர்கள் பின்பற்ற வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.