பலூச்சிமொழியின் செய்தி சேவையை மேலும் வலுப்படுத்த அகில இந்திய வானொலி திட்டம்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ் தானைச் சேர்ந்த மக்களால் பேசப்படும் பலூச்சிமொழியின் செய்தி சேவையை மேலும் வலுப்படுத்த அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவரும் அட்டூழியங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் கவலை தெரிவித்திருந்தார்.

சுதந்திரதின உரையின்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறித்து இதுவரை எந்தபிரதமரும் பேசியதில்லை. தற்போது முதல்முறையாக மோடி பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து பலோச் மக்களால் பேசப்படும் பலூச்சி மொழியின் அகில இந்திய வானொலிசெய்தி சேவையை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வானொலியின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: பலூச்சி மொழியில் வானொலி சேவை கடந்த 1974-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளும், செய்தித்துளிகளும் ஒலிபரப்பப்பட்டு வந்தன.

பிரதமரின் உரையைத்தொடர்ந்து, பலூச்சி மொழியின் செய்திசேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போது அந்த மொழியில் 10 நிமிடங்களாக ஒலிபரப்பப்படும் செய்தித்துளிகளின் நேரத்தையும் அதிகரிக்கவுள்ளோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, பலோச் குடியரசுக் கட்சி தலைவர் பிரஹம்தாக் புக்தியை, பேட்டிகாண்பதற்காக தூர்தர்ஷன் செய்தி சேனல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...