உத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா , தர்மேந்திர பிரதான் நியமனம்

உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2017) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்ததேர்தல்களில் அதிகபட்ச வெற்றியைப்பெற வேண்டும் என்பதில் பாஜக. தீவிரம் காட்டி வருகிறது.  வடகிழக்கு மாநிலங்களில் கால்ஊன்ற வேண்டும் என்ற பாஜக.வின் நீண்ட நாள் முயற்சிக்கு சமீபத்தில் அசாம்தேர்தலில் வெற்றி கிடைத்தது. அசாமில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மணிப்பூரில் நடக்கும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இதற்காக மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையில் பா.ஜ.க. உயர் மட்டக்குழு ஒன்றையும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. கடந்த தடவை நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த பாஜக. இந்த தடவை ஆட்சியை கைப்பற்ற புதியவியூகம் வகுத்துள்ளது.

அதன்படி உத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் இருவரும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...