500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கை கருப்புப்பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போரின் தொடக்கம்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: – பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுகிறார். சுதந்திரத்துக்குப்பிறகு எந்தப் பிரதமரும் கருப்புப்பணத்துக்கு எதிராக போர் நடத்தியதில்லை.
பண மதிப்பு ரத்து என்பது கருப்புப் பணத்துக்கு எதிரான முதல்நடவடிக்கை. அனைத்து ரொக்கமும் வங்கிகளுக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவர் பேட்டியளித்தபோது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தமிழகஅரசின் உள்விவகாரங்களில் மத்தியஅரசு தலையிடாது. ஓ.பி.எஸ்.முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடில்லை. பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துகூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.