எதிர்க்கட்சிகள் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவை

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி 31-ம் தேதி கூட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவை என்று பாஜக விமர்சித்துள்ளது.


இதுதொடர்பாக, தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


ஐந்து மாநில சட்டப் பேரவைத்தேர்தல்களில் தங்களின் தோல்வியும், பாஜகவின் வெற்றியும் நிச்சயமாகும். அண்மையில் எடுக்கப்பட்ட ஒருகருத்துக் கணிப்பும் இத்தேர்தல்களில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்றே தெரிவிக்கிறது. இதனால், எதிர்க் கட்சிகள் பீதியில் உள்ளன. இந்தக்கட்சிகள் அனைத்தும் எதிர்மறை அரசியலை நடத்திய வரலாறு உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதை எதிர்ப்பதன் மூலம் தாங்கள் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவர்கள் என்பதை அவை மீண்டும் உணர்த்தி யுள்ளன.


மத்திய அரசு ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் நன்மைபயக்க கூடிய பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அவற்றுக்கு உரியகாலத்தில் பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் பட்ஜெட்தாக்கல் செய்யப் பட்டால்தான் அது சாத்தியமாகும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது என்பது அரசியல்சாசன ரீதியிலான தேவையாகும்.

அதை நிறைவேற்றவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனினும், ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், தேர்தல் நடத்தை விதி முறைகளை கருதி, அந்த மாநிலங்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப் படும் பட்ஜெட்டில் இடம்பெறாது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...