ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க!

டீமானிட்டைசேஷன் இந்தியாவை இருண்ட காலத்திற்கு தள்ளிவிட்டது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கும் கோமாளிகளின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் அடுத்த மாதத்தில் துவங்க இருக்கும் ஐந்து மாநில தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்ட 'இந்தியா டுடே' தெரிவித்துள்ளது. அதோடு உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களிலும் பிஜேபியே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. அதோடு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தேர்தல் நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று இந்தியா டுடே கூறினாலும் மற்ற கருத்துக்கணிப்புகள் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வரும் என்று கூறியுள்ளது. பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வந்தாலே போதும் அங்கே பிஜேபி ஆட்சி கண்டிப்பாக வந்துவிடும். உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பிஜேபியே ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளது. பஞ்சாபில் மட்டும் மாற்றுக்கருத்துகள் உருவாகியுள்ளது.

இன்னொரு கருத்துக்கணிப்பான ஏபிபி சிஎஸ்டிஎஸ் பஞ்சாப் மாநிலத்தில் பிஜேபி அகாலிதளம் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்கிறது. ஆனால் இந்தியா டுடே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி விட்டது.

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம் பிஜேபி கூட்டணிக்கு எதிராக உள்ள ஓட்டுக்கள் சிதறி காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு செல்லும்பொழுது பிஜேபி கூட்டணி நூலிழையில் கூட வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது. பஞ்சாபில் பிஜேபிக்கு உள்ள மைனஸ் பாயின்ட் அகாலிதளம் தான். ஒரு மாற்றதிற்கு பிஜேபியை கூட்டணியின் தலைமை பதவிக்கு கொண்டு வந்தால் அங்கேயும் பிஜேபிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இந்த தடவை 15 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முடிவு வந்து விடும் என்றே தோன்றுகிறது. இங்கே சமீப காலங்களில் பிஜேபிக்கு நாகலாந்து தீவிரவாத குழுக்களை தீவிரவாத பாதையில் இருந்து மோடி திசை திருப்பியதால் அங்கே பிஜேபிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.மணிப்பூரில் இந்த தடவை நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

இதை விட மணிப்பூரில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க கோரி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் இரோம் சர்மிளா புதிதாக தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். இதனால் மணிப்பூர் தேர்தல் களம் மாறி இங்கேயும் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.

ஆக டீமானிட்டைசேஷன் பிஜேபியை பாதாளத்திற்குள் தள்ளி விடும் என்று நினைத்தவர்கள் தான் பாதாளத்திற்குள் விழுந்து கொண்டிருக்கிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் சொல்வதை கேட்கும்பொழுது நாட்டை முன்னேற்ற மோடி நடத்தும் வேள்விகளுக்கு இந்த நாட்டு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து வருகிறார்கள் என்றே தோன்றுகிறது.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...