உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6-வது கட்டதேர்தலில் அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் பாலியாவில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் , பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். இந்த இரண்டு கட்சிகளும் மாநிலத்தை மண்குட்டையாக்கி விட்டன. இந்த மண்குட்டையில் இருந்து தாமரை மலரும் என்று ராஜ்நாத் தெரிவித்தார். அதாவது தற்போது நடைபெறும் சட்ட சபை தேர்தலில் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்குவரும் என்றார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பிரித்தாலும் சூழ்ச்சி நடக்கிறது. மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு உதாரணம் காயத்ரி பிரஜாபதி ஒருஉதாரணமாகும். அவர் மீது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான் கற்பழிப்புவழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில சட்டசபை தேர்தலில் அமெதி தொகுதியில் காயத்ரி பிரஜாபதி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.