நேற்று, மத்தியநிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ஜெட்லி, ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கான அறிவிப்பை இறுதிசெய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் ஒரு முனை வரி விதிப்பைக் கொண்டுவரும் வகையில், சரக்கு மற்றும் சேவைவரிகளை (Goods and Services Tax) அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி சட்டம் அமல் படுத்துவதற்கான புதிய சட்டத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. எனவே ஜிஎஸ்டி சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.