மேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

மேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், இதற்கு துணைபோகும் மாநில அரசுக்கு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகிலபாரத பிரதிநிதிகள் சபைக்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அகில பாரத தலைவர் மோகன் பகவத், தலைமை வகித்தார். பொதுசெயலர் சுரேஷ்ஜோஷி, கேரள மற்றும் தென்பாரத அமைப்பாளர் வன்னியராஜன், செய்திதொடர்பாளர் மன்மோகன் மைத்ரியா இணைசெயலாளர்கள் சுரேஷ் சோனி, கிருஷ்ணகோபால், பாகையாஜி, மற்றும் உறுப்பினர்கள் பலர்கலந்து கொண்டனர்.

 

3 நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவுவிழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இது தொடர்பாக அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேயா கோச பலே நிருபர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் ஆர்.எஸ்.எஸ்., நல்லவளர்ச்சி கண்டுள்ளது. குமரி முதல் இமயம்வரை எங்களின் அமைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மணிப்பூர் மற்றும் குஜராத்தில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலுப் பெற்றுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாகா அமைப்பில்சேர்ந்துள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் முக்கியமாக, மேற்கு வங்கம், வங்கதேச எல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் அத்துமீறி நடந்துவருவது விவாதிக்கப்பட்டது. இது கவலை அளிக்கிறது. இங்கு வாழும் இந்துக்கள் பாதுகாப்பை மாநில, மத்திய அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இதற்கான ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

 

மேற்குவங்கத்தில் முஸ்லிம் ஓட்டுவங்கி தொடர்பாக மாநில ஜிகாதி இன வெறி, தேசவிரோத சக்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் இந்துக்கள்வளர்ச்சி குறைந்து வருகிறது. காலியாசக் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மீது ஜிகாதிதாக்குதல் காரணமாக ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. இந்துக்கள் வெளியேறிவருகின்றனர். கள்ளநோட்டுகள் கடத்தல் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட வன்செயல்கள் தொடர்கிறது. இங்கு கலவரம் தூண்டப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...