ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன

ராமேஸ்வரம் மீனவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினர்.இதன்பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இரங்கல் தெரிவித்தார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர் குடும்பத்திற்கும் நிவாரணம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.


மீனவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. சுடக்கூடாது என்பது ஒப்பந்தம். இதைமீறி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது கவலைதரும் விஷயம். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார்.


ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதற்கான, ரூ.1,500 கோடி திட்டத்தை மத்தியஅரசு வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி, மாநில அரசுசார்பில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது. இதற்கு காலஅவகாசம் வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார். வரும் மே மாதம் பிரதமர் இலங்கைசெல்ல உள்ளார். அதற்குமுன்னர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...